விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில், கதிர் செய்கையால் மீண்டும் குடும்பத்தில் பூகம்பம் போன்ற பிரச்சனைகள் வெடிக்க வாய்ப்புள்ளது.
மீண்டும் பிரச்சனை:
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த தொடரில், கதிர் மற்றும் முல்லை வீட்டை விட்டு வெளியேறி தனி குடித்தனம் வந்துள்ளனர். அவர்களைப் பார்க்க வரும் தனம், கதிரை பார்த்தால் அழுது விடுவேன் என கூறி முல்லையிடம் மட்டும் ஆறுதல் தெரிவித்து விட்டு வருகிறார். மேலும், கதிர் இல்லாததால் கடையின் வருமானம் வெகுவாக குறைகிறது.
அதுவும், குறிப்பாக கதிர் இருந்தபோது, இருந்த வருமானத்தில் பாதி கூட தற்போது இல்லாமல் போய் கடை நஷ்டத்தில் இயங்குகிறது. இதனால், ஆஸ்பத்திரியில் இருக்கும் மூர்த்தி மேலும் மன உளைச்சலுக்கு ஆளாகிறார். தொடர்ந்து மூர்த்தியை சமாளித்து, கடையை நடத்த உள்ளதாக தனம் முடிவெடுக்கிறார். இது ஒரு புறம் இருக்க, கதிர் வேறு ஒரு கடைக்கு சென்று கணக்கு எழுதும் வேலை பார்ப்பதாக சொல்லி, ஒரு ஹோட்டலில் காய்கறி வெட்டும் வேலையை பார்க்கிறார்.
கதிர் இந்த வேலையில் இறங்கியது யாருக்காவது தெரிந்தால், மீண்டும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் பூகம்பம் வெடிக்க வாய்ப்பு உள்ளது. ஒரு பக்கம் தனம் கடையை எடுத்து நடத்த, மறுப்பக்கம் கதிர் பணத்திற்காக கஷ்டப்படும் இந்த நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்