விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும், பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் கதிர் பாத்திரத்தில் நடித்து வரும் குமரன் தனது இன்ஸ்டா பக்கத்தில் கோபமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
கோப பதிவு :
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும், தொடர்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். தற்போது வீட்டை விட்டு வெளியே போன, கதிர் மற்றும் முல்லை இணைந்து ஒரு ஹோட்டல் துவக்கி உள்ளனர். ஒற்றுமையாக இருந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம், கொஞ்சம் கொஞ்சமாக பிரிய ஆரம்பித்துள்ளது. இப்படிப்பட்ட கதைக்களத்துடன் தற்போது இந்த சீரியல் நகர்ந்து கொண்டிருக்கிறது. இந்த சீரியலில் கதிர் என்ற பாத்திரத்தில் நடித்து வருபவர் குமரன்.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில், ஹோட்டலுக்கு தம்பி கண்ணன் வந்து ஓசியில் 8 முழு சிக்கனையும் வெட்கமே இல்லாமல் சாப்பிட்டு விட்டதாக நகைச்சுவையாக பதிவிட்டுள்ளார். நீங்க யாரும் தப்பா நினைக்காதீங்க ப்ளீஸ் என, அந்தப் பதிவை சீரியலில் வரும் அடுத்த காட்சி குறித்து சற்று காமெடியாக பதிவிட்டுள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள், தம்பியை இவ்ளோ பங்கமாவா கலாய்ப்பீங்க என கமெண்ட் செய்து வருகின்றனர்.
View this post on Instagram