பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான காவியா தற்போது அடக்க ஒடுக்கமான பட்டுசேலையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் காவியா
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கதிருக்கு மனைவியாக நடித்து வருபவர் தான் முல்லை. இந்த சீரியலில் சித்ரா இறந்ததற்கு பிறகு தான் நடிக்க வந்தார். ஆரம்பத்தில் இவருக்கு அதிக எதிர்ப்புகள் இருந்து வந்தது.
ஆனாலும் அசராமல் தொடர்ந்து நடித்து வந்தார். மேலும் மக்கள் மத்தியில் ஷார்ட் பிலிம் மூலம் பிரபலமானவர் என்பதால் இவருக்கு இது சுலபமான ஒன்றாக தான் இருந்தது.
மேலும் ரசிகர்களின் கனவு கன்னியாகவும் மாறினார் காவியா. சீரியலையும் தாண்டி தனது இன்ஸ்டா பக்கத்தில் இவர் வெளியிட்டு வரும் ரீல்ஸ் புகைப்படங்கள் என அனைத்திற்கும் ரசிகர்கள் கூட்டமே உருவானது.
ஆரம்பத்தில் இந்த சீரியலில் முல்லை கதிர் கதாபாத்திரம் தான் அதிகம் பேசப்பட்டது. ரொமான்ஸ் காட்சிகள் தான் சீரியலின் ஹைலைட். காவ்யாவிற்கு இந்த சீரியலில் கதிருடன் ரொமான்ஸ் காட்சிகள் ஒத்து போகுமா?? என்ற கேள்வி தான் ரசிகர்களுக்கு அதிகம் இருந்தது.
ஆனால் சில நாட்களிலேயே காவியா கதிருக்கு அனைத்து விதத்திலும் ஒத்து போனார். அதனால் சித்ரா அனைவரும் மறக்கும் அளவிற்கு செய்து விட்டார். இப்பொழுது முல்லை என்றாலே நியாபகத்திற்கு வருவது காவ்யா தான். இந்நிலையில் அவர் பட்டு சேலையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்