விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கடைக்குட்டியாக நடித்து வரும் கண்ணன் தற்போது செய்த காரியம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணன்
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. கூட்டு குடும்ப கதையம்சம் என்பதால் மக்கள் ஆர்வமாக பார்க்க ஆரம்பித்தனர். இதில் குடும்பமாக செய்யும் லூட்டி, அனைவரிடமும் காட்டப்படும் பாசம் அனைத்தும் மக்களுக்கு பிடித்து போனது.
என்ன தான் சண்டை வந்தாலும் அடுத்த நாளே மறந்து சகஜமாக பேசும் தன்மையும் மக்களை கவர்ந்தது. அதாவது இந்த காலத்தில் இப்படி எல்லாம் இருப்பது என்பது நினைத்து பார்க்க முடியாத ஒன்று.
அதனால் தான் இது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. வெள்ளித்திரையில் சமுத்திரம், ஆனந்தம் திரைப்படம் எல்லாம் இந்த சென்டிமென்ட் அடிப்படையில் தான் ஹிட் அடித்தது. அதே போல தான் இந்த சீரியலும். இதில் கடைக்குட்டியாக நடித்து வருபவர் தான் கண்ணன்.
இவருக்கும் தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இவர் பார்க்க மாஸ்டர் மகேந்திரனை போலவே இருக்கிறார் என்றும் பலரும் கூறி வந்தனர். மேலும் பல ஷார்ட் பிலிம்களிலும் நடித்திருந்தார். இந்நிலையில் அவர் சொந்த ஊரான கோயம்புத்தூரில் எடுத்து கொண்ட மாஸ்ஸான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.