
மூர்த்தி குடும்பத்தில் இருந்து பிரிந்து வந்த கண்ணன்-ஐஸ்வர்யா ஆடம்பரமான பொருட்களை EMI யில் வாங்கியிருந்தனர். மேலும் இதற்கான மாத வட்டியை சரியாக கட்டாததால் பணத்தை திருப்பி செலுத்த வங்கியில் இருந்து இவர்களுக்கு கால அவகாசம் கொடுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் பிரம்மாண்டமாக தனது வளைகாப்பை நடத்த முடிவெடுத்த ஐஸ்வர்யா கஸ்தூரியிடம் வட்டிக்கு பணம் வாங்கி தர சொல்லியிருக்கிறார். அதன்படி அவரும் பணம் வாங்கி தர அதை வைத்து வளைகாப்பை நடத்த முடிவு செய்கின்றனர்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
மேலும் வளைகாப்பு செலவிற்கு கண்ணன் என்ன செய்ய போகிறான் என தனம் யோசிக்கிறார். வீட்டுக்கு வந்த மூர்த்தியிடம் ஐஸ்வர்யாவுக்கு நகை எடுத்துத் தரலாமா என கேட்கிறார். அதற்கு வர அதெல்லாம் வேண்டாம் என சொல்லிவிடுகிறார். மற்றொரு பக்கம் ஜீவா மற்றும் மீனாவும் வளைகாப்பு தங்களால் முடிந்ததை செய்யவேண்டும் என பேசி கொள்கின்றனர். இப்படி இருக்கையில் வங்கியில் வாங்கிய பணத்தினை திரும்பி செலுத்த கொடுக்கப்பட்ட அவகாசம் முடிந்ததால், கடனை திரும்ப பெற கண்ணன் வீட்டுக்கு வங்கியில் இருந்து ஆட்கள் வருகின்றனர்.
அந்த பிரபல நடிகர் தான் என்னோட மகன்.., சரண்யா பொன்வண்ணன் அதிரடி பேட்டி.., ஆச்சரியத்தில் ரசிகர்கள்!!
இப்போ பணத்தை திரும்பி தருகிறீர்களா, இல்லை வீட்டில் இருக்க பொருட்களை எடுத்து கொண்டு போகட்டுமா என மிரட்டுகின்றனர். இல்லாட்டி, உன் பொண்டாட்டியை கூட்டிட்டு போகவா என கேட்டு ஐஸ்வர்யாவை தொட வருகின்றனர். அப்போது அவர்களுடன் கண்ணன் சண்டை போடுகிறார். இப்படி அளவுக்கு மீறி அடுத்தடுத்து கடன் வாங்கிய கண்ணன் இக்கட்டான சூழ்நிலையில் மாட்டி கொள்கிறார். மேலும் இந்த விஷயம் மூர்த்திக்கு குடும்பத்திற்கு தெரியவரும் போது கண்ணனுக்கு அவர் குடும்பத்தினர் உதவி செய்வார்களா என பொறுத்திருந்து பார்ப்போம்.