விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்றைய எபிசோடில் இருந்து புதிய முல்லையை அறிமுகப்படுத்தியுள்ளனர். மேலும் ஜீவா யாருக்கும் சொல்லாமல் வேலை விஷயமாக குமுளி சென்று விடுகிறார். போனையும் அணைத்து வைத்து விடுகிறார். இதனால் வீட்டில் உள்ள அனைவரும் கடுப்பில் உள்ளனர்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தனம் தொடர்ந்து வாந்தி எடுத்ததையடுத்து மூர்த்தி அவருக்கு சுடுதண்ணீர் வைத்து கொடுத்து கால் எல்லாம் அமுக்கி விடுகிறார். அப்பொழுது கண்ணா அங்கே வர அம்மா உங்களை கூப்பிட்டுக்கிட்டே இருந்த இங்க ரெண்டு பெரும் ஜாலியா இருக்கீங்க என்று சொல்ல மூர்த்தி சிரிக்கிறார். சரி என்று தனம் கிளம்ப முல்லை பார்த்துக் கொள்வதாக கூறுகிறார்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
மேலும் அடுத்ததாக தனம், கண்ணா, ஜீவாவின் அம்மா மூர்த்தி அனைவரும் கண்கலங்குகின்றனர். முல்லையின் இறப்பு அவர்களை மிகவும் பாதித்ததாகவும் சொல்கின்றனர். மேலும் சித்ராவிற்கு பதில் முல்லையாக நடிக்க இருப்பதாக காவியாவை அறிமுகப்படுத்துகிறேன். சித்ரா போலவே சேலை, ஹேர் ஸ்டைல், தோடு என அனைத்தையும் செய்திருக்கின்றனர். ஒரு சாயலில் காவியா சித்ராவை போல தான் உள்ளார்.
அடுத்ததாக சீரியலை ஆரம்பிக்கின்றனர். முல்லை அனைவர்க்கும் காபி எடுத்து வருகிறார். மூர்த்தி கதிரிடம் ஜீவா எங்கே என்று கேட்க அவர் ஆர்டர் எடுக்கும் விஷயமாக குமுளி சென்றிருப்பதை கூறுகிறார். இதனால் மூர்த்திக்கு கோவம் வருகிறது. என்னிடம் கூட சொல்லாமல் அவன் எப்படி அங்கு சென்றான் என்று கேட்க எனக்கே தெரியாது பஸ் ஏறும்போது எனக்கு கால் செய்து விஷயத்தை சொல்லிவிட்டு போனை வைத்து விட்டார் என்று கதிர் கூறுகிறார்.
‘ஹேமா கண்ணம்மாவ அப்படியே உரிச்சு வச்சுருக்கா’ – வெண்பாவிடம் விஷயம் தெரியாமல் உளறிய துர்கா!!
ஜீவாவின் அம்மாவும் இதற்கு திட்டுகிறார். அதற்கு முல்லை அவர் சோகமாக இருந்தபோது யார் எதையுமே கண்டுக்கவில்லை. அதனால மாமா கிளம்பி போயிருப்பார் என்று சொல்ல மூர்த்தி ஜீவாவுக்கு கால் செய்கிறார். போனும் போகவில்லை. அடுத்ததாக முல்லை குறுக்கே பேச மூர்த்திக்கு மிகவும் கோவம் வருகிறது. அங்கிருந்து எழுந்து சென்று விடுகிறார். அதன் பின் முல்லையின் அம்மாவும், அப்பாவும் வருகின்றனர்.
வழக்கம் போல முல்லையின் அம்மா குதர்க்கமாகவே பேச ஆரம்பிக்கிறார். ஜீவாவின் அம்மாவும் நடந்தவற்றை முல்லையின் அம்மாவிடம் கூறுகிறார். பிறகு முல்லையிடம் அவரது அம்மா கல்யாணம் ஆனா அனைவரும் மாற தான் செய்வாங்க அவங்க போக்குல விட்டுடனும் என்று சொல்ல, முல்லை கோவமடைகிறார். பிறகு ஜீவா அப்படியே எங்கயாச்சும் போயிட்டானா இல்ல வேலை விஷயமா தான் போயிருக்கான என்று கேட்க முல்லை முறைக்கிறார். இதோடு எபிசோடும் முடிவடைகிறது.