பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் வீட்டின் இரண்டாவது தம்பியின் மனைவி மீனாவாக நடித்து வருபவர் ஹேமா. இவர் தற்போது தனது இன்ஸ்டாவில் ஒரு வீடியோவை வெளியிட்டு உள்ளார். அந்த வீடியோ ஹேமாவும் தனத்தின் அண்ணனாக நடித்து வரும் ஜெகாவும் இணைந்து தனது சொந்த குரலில் ஒரு பாடலை பாடியுள்ளார்.
கடந்த 2018ஆம் ஆண்டு முதல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தற்போது ஏராளமான ரசிகர்களை பெற்று ஒரு வெற்றி சீரியலாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் 4 அண்ணன் தம்பிகளை கொண்ட ஒரு கூட்டு குடும்பத்தின் கதையை மையமாக கொண்டு ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்த சீரியலில் வீட்டின் இரண்டாவது தம்பி ஜீவாவின் மனைவி மீனா கதாபாத்திரத்தில் ஹேமா நடித்து வருகிறார்.
இவர் அந்த வீட்டில் இருந்து கொண்டு ஒவ்வொரு பிரச்சனைகளாக கிளப்பி குடும்பத்தின் மன நிம்மதியை கெடுத்து வந்தார். மேலும் இவர் தனக்கும் தனது பிள்ளைக்கும் இந்த வீட்டில் ஒரு அங்கீகாரம் இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்து, கிடைக்கும் நேரத்தில் எல்லாம் பல பிரச்சனைகளை செய்து வந்தார். இந்த சீரியலில் முதலில் வில்லியாக இவர் தான் இருப்பார் என்று நினைத்த வேளையில், கண்ணனுக்காக இவர் செய்த பல செயல்கள் அவரின் மீதான அபிப்பிராயத்தை மாற்றியது.
View this post on Instagram
மேலும் இந்த சீரியலில் தற்போது மூர்த்தியின் அம்மா லட்சுமி இறந்து குடும்பமே மீளா துயரத்தில் இருக்கிறது. இவ்வாறு சோகத்தின் உச்சத்தில் இருக்கிறது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல். இந்நிலையில் ஹேமா தனது இன்ஸ்டாவில் ஒரு வீடியோவை வெளியிட்டு உள்ளார். அதில் தென்றல் வந்து என்னை தீண்டும் போது…என தொடங்கும் பாடலை ஹேமாவும், பாண்டியன் ஸ்ட்ரோஸ் சீரியலில் தனத்தின் அண்ணனாக நடித்து வரும் ஜெகாவும் தங்களின் சொந்த குரலில் பாடி உள்ளார். அதற்கு அவரின் ரசிகர்கள் நக்கலாக விமர்சித்து வருகின்றனர்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்