பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஜனார்த்தனன் கதாபாத்திரத்தில் இதற்கு முன்னாள் நடித்த வெங்கட் என்பவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் வெங்கட் சுபு
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தற்போது விறுவிறுப்பான கட்டங்களுடன் நகர்ந்துக்கொண்டுள்ளது. மல்லி புதிதாக கதைக்குள் நுழைந்து அதனால் ஏற்படும் பிரச்சனைகளை வீட்டில் சமாளித்துக்கொண்டுள்ளனர். இந்நிலையில் பிரஷாந்த் வேறு ஐஸ்வர்யா பின்னாடி சுற்றுவதால் கண்ணனுக்கு சுத்தமாக இது பிடிக்கவில்லை.
Facebook => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!
ஏற்கனவே கஸ்தூரி ஐஸ்வர்யாவை வசதியான வீட்டில் தான் கட்டி கொடுப்பேன் என்று சொல்லி கொண்டுள்ளார். இதில் கஸ்தூரியும், மல்லியும் நெருங்கிய உறவு வேறு. அப்படி இருக்க ஐஸ்வர்யாவை பிரஷாந்துக்கு பெண் கேட்க நிறைய வாய்ப்புள்ளது. இப்படி பல திருப்பங்களுடன் கதை நகர்ந்துகொண்டுள்ளது. இந்த சீரியலில் தொடக்கத்தில் மீனாவின் அப்பாவாக நடித்திருந்தவர் தான் வெங்கட் சுபு.
பிளாஸ்மா சிகிச்சையை கைவிட்ட அரசு – இது தான் காரணமா??
சில காரணங்களால் இவர் இந்த சீரியலை வ விட்டு விலகினார். இந்நிலையில் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் அவரது ரசிகர்கள் பலரும் வருத்தத்தில் உள்ளனர். அவர் மீண்டு வருவதற்கு பிரார்த்தனை செய்தும் வருகின்றனர்.