பாண்டியன் ஸ்டோர்ஸ் கடைக்கு புதிய ஐடியாவை தரும் கதிர் – புறக்கணிக்கும் மூர்த்தி ஜீவா!!

0
பாண்டியன்  ஸ்டோர்ஸ் சீரியலில் மீனா  கண்ணனை கடையில்  வேலை செய்ய  விட்டுவிட்டு  செல்கிறார். மேலும் ஜனார்தனனை  தொடர்ந்து  வம்பிழுத்துக்கொண்டே  இருக்கிறார் கண்ணன்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 

பாண்டியன்  ஸ்டோர்ஸ்  சீரியலில்  தொடர்ந்து பல  திருப்பங்களுடன்  ஒளிபரப்பாகி வருகிறது. மீனாவின்  குழந்தை அழுததை அடுத்து அவர்  வீட்டிற்கு செல்கிறார். கண்ணனை  கடையில்  இருக்க  சொல்லிவிட்டு  செல்கிறார். ஜனார்தனனும், கண்ணனும்  மாறி மாறி  கலாய்த்து கொள்கின்றனர். ஒரு கட்டத்தில்  கடுப்பாகும்  ஜனார்த்தனன்  திட்டி  விடுகிறார்.
அடுத்தடுத்து கடைக்கு  கஸ்டமர் வருகிறார். வருபவர்களிடம் பாண்டியன்  ஸ்டோர்ஸ்க்கு  போங்க  என்று அனுப்பி  வைக்கிறார். மேலும் வருபவர்களிடம்  தரம்  நன்றாக  இல்லை  என்றும் சொல்லி  அனுப்புகிறார். இதனை ஜனார்த்தனன்  கேட்டு விடுகிறார். அடுத்து மூர்த்தி வீட்டில்  அனைவரும்  சாப்பிட்டு கொண்டுள்ளனர்.
அப்பொழுது  கண்ணன்  கடையில்  இருந்ததை பற்றி  பேசுகின்றனர். மீனா  தன்  அப்பாவிற்கு  உடம்பு சரியில்லை என்று கூறுகிறார். லட்சுமி ஜனார்த்தனனால்  தான் இப்படி  ஆகிவிட்டது  என்று  சொல்கிறார். அடுத்ததாக கதிர் ஒரு ஐடியாவை  சொல்கிறார்.
அதாவது  ரூ.100 பொருளை  கூட  டோர் டெலிவரி செய்யலாம்  என்று சொல்கிறார். இது சரியாக வராது  என்றும்  ஜீவாவும், மூர்த்தியும்  சொல்கின்றனர். மீனாவும்  இது சரிப்பட்டு  வராது  என்றும்  சொல்கிறார். இதஹனால் கதிருக்கு  என்னவோ  போல  ஆகிறது. வேறு எதாவது  யோசிப்போம் என்று கூறி  விடுகின்றனர்.
அடுத்ததாக இரவு முழுக்க  கதிர்  நடந்தபடி  யோசித்துக்கொண்டுள்ளார். முல்லையிடம்  தனது  ஐடியாவை  பற்றி  டிஸ்கஸ் செய்கின்றனர். இதுநாள்  வரை ரூ.1500 வரை பொருள் வாங்கினால்  தான் டோர்  டெலிவரி  செய்கிறோம். இதனை  சின்ன  சின்ன  பொருள் வாங்கினாலும் டோர்  டெலிவரி  செய்தால்  கண்டிப்பாக  கட்டுப்படியாகும்  என்று கூறுகிறார்.
இதற்கெல்லாம் வழி  இருக்கும்  என்று கூறுகிறார். ஆனால் தான்  பேசினால்  சரி வராது என்றும் கூறுகின்றனர். திரும்பவும்  போய்  எப்படி சொல்வது  என்று யோசிக்கின்றார் கதிர். நாளைக்கு  போய்  கண்டிப்பாக  புரியுற மாதிரி பேசுங்க  என்றும் முல்லை  கூறுகிறார். இதோடு  எபிசோடு  முடிவடைகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here