விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது மீனாவால் தொடர்ந்து பல பிரச்சனைகள் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் முல்லையின் அம்மாவிற்கு நடக்க இருக்கும் ஆபரேஷன் பற்றி உளறி விடுகிறார் மீனா.
பாண்டியன் ஸ்டோர்ஸ்
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது சூப்பர் மார்க்கெட் கட்டுவதற்காக லோன் விஷயமாக அண்ணன் தம்பிகள் அனைவரும் அலைந்துகொண்டுள்ளனர். மேலும் லோன் வாங்க வேண்டும் என்றால் வீட்டில் ஒருவர் பெயரில் தான் வீட்டை மாற்ற வேண்டும்.
இது பல பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. மீனா முல்லையின் அம்மா என பலரும் இது தவறான ஒன்று என்று சண்டையிடுகின்றனர். அதன் பின் இன்றைய எபிசோடில் பார்வதி முல்லையின் அப்பாவிடம் நடந்தவற்றை கூற அவருக்கே என்னவோ போல ஆகிறது.
அடுத்ததாக பேங்கில் மூர்த்தி சென்று கண்டிப்பாக ஒருவர் பெயரில் வீட்டை மாற்ற வேண்டுமா?? என்று கேட்கின்றனர். இதனை விட்டால் வேறு வழியும் இல்லை என்று கூறுகின்றனர். மேலும் இது தன்னால் முடியாது என்றும் கூறி விடுகிறார் மூர்த்தி. அதே போலவே தனமும் வீட்டை மாற்ற வேண்டாம் என்றே கூறுகிறார்.
மீனா வீட்டை விற்பதை பற்றி தனது அம்மாவிடம் கூறுகிறார். கலையும் இதற்கு மீனாவை ஏற்றி விடுகிறார். உங்களுக்குனு இருக்குறது அந்த ஒரு சொத்து தான் அதையும் விட்டுட்டு இருக்க போறியா?? என்று கேட்க ஜீவாவுக்கே எந்த பிரச்சனையும் இல்லை. இதுல எனக்கு என்ன இருக்கு என்று கூறுகிறார்.
அடுத்ததாக மீனா முல்லை, தனம் குழந்தையுடன் விளையாடிக்கொண்டுள்ளனர். முல்லையின் அம்மா திடீரென கால் செய்ய பேசிவிட்டு வருகிறார். அப்பொழுது மீனா முல்லையின் அம்மாவிற்கு இதயத்தில் இருக்கும் பிரச்னையை பற்றி உளறுகிறார். தனம் எவ்வளவு தடுத்தும் மீனா கேட்பதாக இல்லை. இதயத்தில் இருக்கும் அடைப்பு பற்றி கூறி விடுகிறார். இதனை கேட்ட முல்லை துடித்து போகிறார். இதோடு எபிசோடும் முடிவடைகிறது.