பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது கண்ணன் விஷயம் வீட்டிற்கு தெரிந்து பிரச்சனையாக வீட்டை விட்டே வெளியேறுகிறார். இந்நிலையில் கண்ணன், ஐஸ்வர்யா திருமணம் செய்துகொள்ளும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
பாண்டியன் ஸ்டோர்ஸ்
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது கண்ணன் ஐஸ்வர்யா ஜோடி எப்பொழுது ஒன்று சேரும் என்று காத்து கொண்டுள்ளனர். பிரஷாந்த் வேறு இருவரின் மீது கொலை காண்டில் உள்ளார். ஐஸ்வர்யாவை அடைந்தே தீருவேன் என்ற வெறியில் உள்ளார்.
கஸ்தூரி வேறு முல்லைக்கு கால் செய்து நடந்த விஷயத்தை பற்றி சொல்ல கண்ணனிடம் சென்று கோவப்படுகிறார். இதனை தனமும் கேட்டு விடுகிறார். கடைசியில் கண்ணன் பணத்தை திருடிய விஷயமும் வெளிவருகிறது.
இதனால் கோவமடையும் மூர்த்தி கன்னத்தை சேர்த்து அறைத்து இனிமேல் என் முஞ்சியிலேயே முழிக்காத என்று சொல்லி விடுகிறார். இதனால் கண்ணன் வெளியே செல்கிறார். அந்த சமயம் பார்த்து ஐஸ்வர்யாவும் வீட்டை விட்டு யாருக்கும் தெரியாமல் வர இருவரும் எதார்த்தமாக ஒரு இடத்தில் சந்தித்து கொள்கின்றனர்.
இதோடு ப்ரோமோ முடிவடைந்தது. இந்நிலையில் புதிய புகைப்படம் ஒன்று இணையத்தில் உலா வருகிறது. அதாவது ஐஸ்வர்யா மற்றும் கண்ணன் திருமண கோலத்தில் இருப்பது போன்ற புகைப்படம் தான் அது. அப்படி என்றால் இருவருக்கும் திருமணம் நடக்க போகிறதா?? இதனால் நடக்க போகும் விளைவுகள் என்ன?? என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்து கொண்டுள்ளனர்.