வீட்டை விட்டே வெளியேறும் கண்ணன், ஐஸ்வர்யா – குடும்பத்தை எதிர்த்து திருமணம் செய்துகொள்வர்களா??

0

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் கண்ணன் பணத்தை திருடிய விஷயம் வீட்டில் உள்ள அனைவர்க்கும் தெரிய வர அது பெரிய பிரச்னையாகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது கண்ணன் ஐஸ்வர்யாவிற்கு கால் செய்ய அதனை கஸ்தூரி பார்த்து விடுகிறார். மேலும் முல்லைக்கு கால் செய்து நடந்ததை சொல்லி இனி கண்ணன் ஐஸ்வர்யாவுடன் பேசினால் நான் என்ன செய்வேன் என்றே தெரியாது என்று திட்டி விடுகிறார்.

இதனால் கோவமாகும் முல்லை கண்ணனிடம் ஏன் இந்த மாதிரி பண்ற என்று திட்டுகிறார். அப்பொழுது தனம் அங்கு வந்து விட என்ன நடந்தது என்று கேட்கிறார். முல்லை எதோ சமாளிக்க போக தனம் விடுவதாக இல்லை.

முல்லை நடந்தவற்றை சொல்லி விடுகிறார். மேலும் பணத்தை திருடிய விஷயமும் தெரிந்து விடுகிறது. அப்பொழுது மூர்த்தி வீட்டிற்கு வர அனைவரின் முகத்திலும் ஒரு கவலை தெரிய என்ன என்று கேட்கிறார்.

மீனா நடந்த உண்மைகளை சொல்லி விடுகிறார். இனி என் முஞ்சியிலேயே முழிக்காத என்று சொல்லிவிட்டு செல்கிறார் மூர்த்தி. கண்ணன் வீட்டில் இருந்து வெளியேற ஐஸ்வர்யாவும் வீட்டில் யாருக்கும் தெரியாமல் வீட்டை விட்டு வருகிறார்.

ஐஸ்வர்யாவும் கண்ணனும் சந்திக்க அதோடு ப்ரோமோவும் முடிவடைந்தது. இனி கண்ணன் ஐஸ்வர்யா என்ன செய்ய போகிறார்கள்?? வீட்டில் ஒத்து கொள்வார்களா?? என்ற பல திருப்பங்களுடன் சீரியல் நகர்ந்து கொண்டுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here