ஐஸ்வர்யாவுக்கு மட்டும் ஏதாச்சும் ஆச்சு உங்க சங்க அருத்துருவேன்’ – தனத்தை மிரட்டிவிட்டு சென்ற கஸ்தூரி!!

0

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது ஐஸ்வர்யா வீட்டை விட்டு வெளியேற அவரை தேடி கஸ்தூரி மூர்த்தி வீட்டிற்கு வந்து சண்டையிடுகிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது கண்ணன் கல்யாணத்திற்கான அனைத்து வேலைகளையும் பார்த்து கொண்டுள்ளார். கண்ணன் ஜெராக்ஸ் எடுக்க கடைக்கு செல்ல அப்பொழுது பார்த்து ஜீவா வந்து விடுகிறார். கண்ணனை பார்த்தும் விடுகிறார்.

ஜீவாவை எப்படியோ சமாளித்து அங்கிருந்து சென்று விடுகிறார். வீட்டில் ஐஸ்வர்யா காணாமல் போனதால் அனைவரும் தேடிக்கொண்டுள்ளனர். கஸ்தூரிக்கு கண்ணன் மீது தான் சந்தேகம் அதிகமாக உள்ளது.

இதனால் கோவமடையும் கஸ்தூரி மூர்த்தி வீட்டிற்கு சென்று சத்தம் போடுகிறார். ஐஸ்வர்யாவிற்கு மட்டும் ஏதாச்சும் ஆச்சுன்னா உங்க சங்கை அறுத்துடுவேன் என்று சொல்கிறார். இதனால் வீடே கலவரமாகிறது.

பிரஷாந்த் ஊரெல்லாம் தேடிக்கொண்டுள்ளார். மல்லிக்கு விஷயம் தெரிய அவரும் ஷாக்காகிறார். கண்ணன் ஐஸ்வர்யாவை இழுத்துட்டு ஓடிட்டான் என்று சொல்கிறார். ஆனால் வீட்டில் உள்ள அனைவரும் கண்ணன் அப்படி பட்ட ஆள் இல்லை என்று கூறுகின்றனர்.

கண்ணன் ஐஸ்வர்யா இருவருமே ஒரே காரில் செல்ல துணி எடுப்பதற்காக இறங்குகின்றனர். அப்பொழுது பிரஷாந்த் அந்த பக்கம் வர அதோடு எபிசோடும் முடிவடைகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here