ஐஸ்வர்யா கண்ணன் காதல் விஷயம் தெரிந்து ஒரே வாரத்தில் திருமண ஏற்பாடுகளை செய்யும் பிரஷாந்த் – பரிதாபமாகும் கண்ணனின் நிலை??

0

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் பிரஷாந்த்துக்கு கண்ணன் ஐஸ்வர்யா நெருக்கமாக பழகுவது பிடிக்காமல் போக அதனை ஐஸ்வர்யா உடனே நேரடியாக கேட்கிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

தனத்தின் வளைகாப்பு விழா முடிந்து அனைவரும் வீட்டிற்கு செல்ல மல்லியும் பிரஷாந்த்தும் ஐஸ்வர்யா வீட்டிற்கு செல்கின்றனர். ஐஸ்வர்யாவை பிரஷாந்த் முறைத்து கொண்டே இருக்க கஸ்தூரி ஏதும் பிரச்சனையா?? என்று கேட்கிறார். பிரஷாந்த் ஐஸ்வர்யாவை வெளியில் அழைத்து செல்ல வேண்டும் என்று சொல்கிறார்.

அடுத்ததாக மூர்த்தி வீட்டில் தனம் வீட்டிற்கு வராததை நினைத்து அவரது அம்மா கோவமடைகிறார். தனம் இந்த வீட்டை விட்டு சென்றால் எங்களுக்கு இருக்கவே முடியாது என்று முல்லை சொல்கிறார்.

தனத்தின் அம்மா அவருக்கு எதுவும் தனியாக செய்ய முடியாது என்று கவலைப்படுகிறார். தனக்கு வயதாகி விட்டதால் முன்பு போல வேலை பார்க்க முடியவில்லை என்று சொல்கிறார்.

அடுத்ததாக பிரஷாந்த் ஐஸ்வர்யாவிடம் கோவமாக நடந்து கொள்கிறார். நமக்கு நிச்சயம் நடந்து 2 வாரம் ஆகிடுச்சு. இதுவரைக்கும் நீ என்கிட்டே சரியாவே பேசுனது கிடையாது, நானே கால் பண்ணாலும் அப்பவும் பேச மாட்டேங்குற. ஆன இன்னைக்கு வளைகாப்பு விழாவில் கண்ணனுடன் அப்படி சிரிச்சு பேசுற.

அதை பார்க்கும்போது எனக்கு எப்படி இருந்துச்சு தெரியுமா?? அவனை கொன்னுடலாம் போல இருக்கு என்று சொல்கிறார். இதனால் கோவமடையும் ஐஸ்வர்யா கண்ணனை அப்படி பேசாதீங்க என்று சொல்கிறார். மேலும் தானும் கண்ணனும் விரும்புவதாக சொல்கிறார்.

எனக்கு கலயாணத்தில் விருப்பமில்லை என்று அனைத்து விஷயத்தையும் சொல்லி விடுகிறார். பிரசாந்த் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்து விடுகிறார். வீட்டிற்கு வந்ததும் கல்யாணத்தை நிறுத்துவார் என்று நினைத்தால் வரும் வாரத்தில் கல்யாணத்தை வைத்து விடலாம் என்று சொல்கிறார். இதற்கு அனைவரும் ஒத்து கொள்கின்றனர். மேலும் இந்த விஷயத்தை மூர்த்தி வீட்டிற்கு சென்று சொல்கின்றனர். இதனை கேட்டு கண்ணன் ஷாக்காகிறார்.

“பாரதி கண்ணம்மா” சீரியல் விடீயோவை பார்க்க கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here