பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது அனைத்து காரியங்களும் நல்லபடியாக முடிய தனத்தின் கனவில் வந்து ஆசீர்வதிக்கிறார் லட்சுமி. இதனால் தனம் மிகவும் சந்தோஷமடைகிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்
கண்ணன் வீட்டிற்கு வர அவரை பார்த்ததும் மூர்த்தி எழுந்து செல்கிறார். இதனால் கண்ணன் நொந்து போகிறார். தன்னை சேர்த்து கொள்ளவே மாட்டார்களா?? என்று மனத்துக்குள்ளயே புலம்புகிறார். ஐஸ்வர்யா கண்ணனுக்கு ஆறுதல் சொல்கிறார். இந்த நிலை ஒரு நாள் மாறும் என்று சொல்கிறார்.
மேலும் பாண்டியன் ஸ்டோர்ஸ் வீட்டில் அனைவரும் அடுத்த வேலைகளை பார்த்து கொண்டுள்ளனர். அப்பொழுது தனம் கண்ணனுக்கு சாப்பாட்டை கொடுத்து விடுகிறார். கண்ணன் அழுதுகொண்டே அதனை சாப்பிடுகிறார். மேலும் மூர்த்தியிடம் தைரியமாக இருக்க வேண்டும் என்று சொல்கிறார்.
மேலும் கண்ணனை வளர்த்தது நான் தான் அவன் என்னோட பையன் தான் அவனை ஏன் இப்படி வெறுக்கணும் என்று கேட்கிறார். ஆனாலும் மூர்த்தி எதுவும் சொல்லாமல் மௌனம் காக்கிறார். அதன் பின் மூர்த்தி தனம் தூங்க செல்ல அப்பொழுது திடீரென லட்சுமி தலை நிறைய பூ வைத்து, பட்டுசேலை கட்டி வீட்டிற்கு வருகிறார்.
எங்க அத்தை போனீங்க என்று கேட்கிறார். உங்கள எப்படி தேடுனோம் தெரியுமா?என்று சொல்கிறார். என்ன எதுக்கு தேடுனீங்க? நான் இங்க தான் இருக்கேன். உன் குழந்தையை நான் பாத்துட்டு தான் போவேன்.
எதுக்கு எல்லாரும் அழுதுட்டே இருக்கீங்க எனக்கு பிடிக்கல, உன்ன நம்பி தான் போனேன், மூர்த்தியை நீ தானே பார்த்துக்கணும் என்று சொல்கிறார். மேலும் அங்கிருந்து மெதுவாக கிளம்புகிறார். போகாதீங்க அத்தை என்று கத்த அப்பொழுது தான் அது கனவு என்றே புரிகிறது. இதோடு எபிசோடும் முடிவடைகிறது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்