கண்ணன் ஐஸ்வர்யாவிற்கு ரோஸ் கொடுப்பதை பார்த்து விடும் பிரஷாந்த் – நடக்க இருக்கும் விபரீதம் என்ன??

0

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் வளைகாப்பு விழாவில் கண்ணன் ஐஸ்வர்யாவுடன் நெருங்கி பழகுவதை பார்த்து பிரஷாந்த் கோவத்தில் அங்கிருந்து செல்கிறார். மேலும் தனம் அவர் வீட்டிற்கு செல்வதை பார்த்து அனைவரும் கதறி அழுகின்றனர்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்றைய எபிசோடில் விஜய் டிவி நாயகிகள் அனைவரும் வந்து தனத்திற்கு வாழ்த்து சொல்கின்றனர். மேலும் டான்ஸிலும் கலைக்கட்ட ஒரே குதூகலமாக ஆகிறது. அடுத்ததாக கண்ணன் ஐஸ்வர்யா பின்னாலேயே சுற்றுகிறார்.

உனக்கு ஒன்னு வச்சு இருக்கேன் என்று கண்ணன் சொல்ல ஐஸ்வர்யா வெக்கப்படுகிறார். மேலும் கண்ணன் ஐஸ்வர்யாவிற்கு ரோஸ் கொடுக்க அதனை ஐஸ்வர்யா வெக்கபட்டுக்கொண்டே வாங்க அதனை தூரத்தில் இருந்து பிரஷாந்த் பார்த்து விடுகிறார்.

பிரஷாந்துக்கு கோவம் கொந்தளித்து கொண்டு வருகிறது. அங்கிருந்து சென்று விடுகிறார். மேலும் தனம் வீட்டிற்கு செல்ல தயாராக குடும்பமே கண்கலங்குகிறது. கதிரால் அங்கு இருக்கவே முடியவில்லை. மூர்த்தியிடம் கலக்கத்துடன் தான் சென்று வருவதாக சொல்கிறார். மூர்த்தி தினமும் வந்து பார்ப்பதாக சொல்கிறார்.

ஜீவா நீங்க இல்லாத வீடு எப்படி இருக்கும் என்று கண்கலங்குகிறார். மீனா கதறி அழுதே விடுகிறார். கண்ணன் உங்களுடனேயே வருவதாக சொல்கிறார். அதற்கு கஸ்தூரி நீ எதுக்கு வரேன்னு எனக்கு தானா தெரியும் என்று சொல்கிறார். ஐஸ்வர்யாவுடன் இப்படி பட்டவன் உனக்கு தேவையா?? என்று கேட்க அதற்கு மூஞ்சியில் அடித்தார் போல ஆமாம் என்று சொல்கிறார்.

கடைசியில் கண்ணன் தனத்தின் கையை பிடித்து போகவே வேண்டாம் என்று கெஞ்சுகிறார். தனம் இவர்களை விட்டு தான் எங்கும் வர மாட்டேன் என்று கூறுகிறார். மேலும் தன் அம்மாவை தன்னுடனேயே தங்கும்படி கேட்கிறார். கடைசியில் அவரும் ஒத்து கொள்கிறார். இதனால் குடும்பமே சந்தோஷமடைகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here