அப்பப்பா.., என்ன ஒரு ரொமான்ஸ், பின்னிட்டீங்க கதிர் – காதல் காட்சிகளுடன் வெளியான பாண்டியன் ஸ்டோர்ஸ்!!

0

விஜய் டிவியில் தற்போது பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இத்தனை நாட்கள் எதிர்பார்த்திருந்த கதிர் முல்லை ரொமான்ஸ் சீன் ஒளிபரப்பாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கண்ணன் பணத்தை திருட அந்த பழி முல்லையின் மீது விழுகிறது. முல்லையின் மேல் விழுந்த பழியை துடைக்க கதிர் கதிரேசனிடம் பணத்தை கடன் வாங்கி அதனை பீரோவில் வைக்கிறார். பணம் கிடைத்த சந்தோசத்தில் வீட்டில் அனைவரும் இருக்க மீனாவிற்கு இதில் எதோ நடந்திருப்பதாக தெரிகிறது. ஆனாலும் யாரும் இதனை கண்டுகொள்ளவும் இல்லை.

முல்லைக்கு கதிர் மீது முன்பை விட காதல் அதிகரிக்கிறது. கண்ணனுக்கு இந்த பணம் கதிர் தான் வைத்திருப்பாரோ என்ற சந்தேகமும் எழுகிறது. இதனை வீட்டில் உள்ளவர்கள் மறந்தும் விட்டனர். நேற்றைய எபிசோடில் முல்லையும், கதிரும் கோவிலுக்கு செல்ல அவரது தோழி மூலம் பிரச்சனை ஏற்படுகிறது.

இந்த காலத்துல பிடிக்கலைன்னா ரொம்ப கஷ்டம் என்று ஆரம்பிக்க முல்லைக்கு கோவம் வருகிறது. இதனால் கடுப்பாகும் முல்லை அவர்களை அங்கிருந்து போக சொல்கிறார். பிறகு கதிரையும் சமாதானம் செய்கிறார். வீட்டிற்க்கு வர அங்கு மூர்த்தி லோனை கடையை வைத்து வாங்கிக்கொள்ளலாம் என்று சொல்கிறார். இதனால் குடும்பம் சந்தோஷமடைகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

திடீரென கஸ்தூரி அழுதுகொண்டே வீட்டிற்கு வருகிறார். தன்னை உங்க அண்ணன் துரத்தி விட்டார் இனிமேல் இங்க தான் இருப்பேன் என்றும் கூறுகிறார். அவரை சமாதானம் செய்ய அடுத்ததாக கண்ணனுக்கு ஐஸ்வர்யாவிடம் இருந்து கால் வருகிறது. சிரித்து பேசிக்கொண்டிருக்க முல்லை பார்த்து விடுகிறார். அப்பொழுது கதிரும் உள்ளே வருகிறார்.

வேகமாக சென்று போனை பிடுங்க அதில் ஐஸ் என்று இருப்பதை பார்த்து யார் என்று கேட்கின்றனர். கண்ணன் ஐஸ்வர்யாவுடன் ஊர் சுற்றுவதை முல்லையிடம் சொல்கிறார். கோவமடையும் முல்லை மாமாவிடம் சொல்ல போவதாக சொல்கிறார். எப்படியோ சமாளித்து விட்டு அனுப்பி வைக்க கதிரும் முல்லையும் பேசி கொண்டுள்ளனர்.

முடி உதிர்வு பிரச்சனையா?? இந்த எண்ணெய்யை மட்டும் யூஸ் பண்ணி பாருங்க!!

தன் அப்பா என்ன சொன்னார் என்று கேட்க அதற்கு உங்க வீட்டுக்கு ஏற்கனவே 2 பேரை அனுப்பி கஷ்டபடுத்தி இருக்கோம். இன்னொன்னு வேணாம்னு சொன்னாரு என்று சொல்ல முல்லை கதிரை அடிக்க வருகிறார். அதன் பிறகு தான் சீனே ஆரம்பிக்கிறது. முல்லை அந்த பக்கம் எதார்த்தமாக திரும்ப கதிர் முல்லைக்கு முத்தம் கொடுக்கிறார். இதனால் ஷாக் ஆனது முல்லை மட்டுமல்ல ரசிகர்களும் தான். எப்படியோ முல்லை கதாபாத்திரத்தில் செட்டில் ஆகிவிட்டார் காவியா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here