ஐஸ்வர்யாவை கட்டாயப்படுத்தி டான்ஸ் ஆட அழைக்கும் பிரஷாந்த் – கடுப்பான கண்ணன்!!

0

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் வளைகாப்பு விழா கோலாகலமாக நடந்து வரும் நிலையில் பாலா மற்றும் சரத் இன்றைய எபிசோடில் களமிறங்கியுள்ளனர்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தனத்திற்கு வளைகாப்பு விழா நடந்து கொண்டுள்ளது. விஜய் டிவியில் உள்ள பிரபலங்கள் அனைவரும் இந்த சீரியலில் கலந்து கொண்டுள்ளனர். இன்றைய எபிசோடில் குக் வித் கோமாளி பிரபலங்கள் பாலா மற்றும் சரத் பங்கேற்கின்றனர்.

அவர்களை பார்த்ததும் குடும்பமே சந்தோஷமடைகிறது. வழக்கம் போல பாலா தனது காமெடிகளை அள்ளி தெளிக்க நிகழ்ச்சியே கலகலப்பாகிறது. பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்திற்கு பாலா ஒரு போட்டியை அறிவிக்கிறார். அதாவது கணவன் மனைவிக்குள் எந்த அளவிற்கு ஒற்றுமை இருக்கிறது என்ற போட்டி தான் அது.

வழக்கம் போல மூர்த்தி, தனத்திடம் ஆரம்பிக்கின்றனர். மூர்த்தி விரும்பி சாப்பிடும் உணவு பற்றி கேட்க தனம் சரியாக சொல்லி விடுகிறார். ஆனால் மூர்த்தி சொதப்பி விடுகிறார். அடுத்ததாக ஜீவா மீனாவிடம் கேட்க ஜீவா சரியாக சொல்லி விடுகிறார். ஆனால் மீனா தவறாக சொல்லி விடுகிறார்.

அடுத்ததாக முல்லை கதிரிடம் இந்த கேள்வியை கேட்க இருவருமே சரியாக பதில் சொல்லி அசத்துகின்றனர். மேலும் முல்லை கதிர் டான்ஸ் வேறு ஆடியதால் இன்றைய நிகழ்ச்சி முழுக்க  ஆட்டம் பாட்டம் என குடும்பமே கொண்டாட்டத்தில் உள்ளது.

ஐஸ்வர்யாவை அடிக்கடி பிரஷாந்த் வேறு முறைத்து கொண்டுள்ளார். கடைசியாக கண்ணன் பிரஷாந்த் இருவரும் சேர்ந்து ஆட பிரஷாந்த் ஐஸ்வர்யாவை அழைக்கிறார். ஆனால் ஐஸ்வர்யா வர மறுக்கிறார். அனைவரும் கட்டாயப்படுத்த தன்னால் முடியாது என்று வர மறுக்கிறார். இதனால் கோவத்தின் எல்லைக்கே சென்று விடுகிறார் பிரஷாந்த்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here