‘சின்ன பொட்டிக்கடைய வச்சிக்கிட்டு என்ன சீன் போடுறீங்க’ – ஜீவாவை கண்டபடி திட்டும் ஜனார்த்தனன்!!

0

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது பணத்தை முல்லையிடம் கேட்க அவர் வைத்த இடத்தில் பணம் இல்லாததால் குடும்பமே அதிர்ச்சியில் உள்ளது. கண்ணன் செய்த தவறை ஒத்துக்கொள்வாரா?? அல்லது முல்லை பிரச்சனையில் மாட்டுவாரா??

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லைக்கும், மீனாவிற்கு அடிக்கடி சண்டை வந்துகொண்டே உள்ளது. தொட்டதற்கெல்லாம் மீனா முல்லையிடம் சண்டையிடுகிறார். இன்று கண்ணன் காலேஜில் இருந்து வீட்டிற்கு பதட்டமாகவே வருகிறார். உண்மை தெரிந்து விடுமோ என்று பதறுகிறார்.

வீட்டில் உள்ளவர்கள் கண்ணனின் முக மாற்றத்தை கண்டுபிடித்து என்ன என்று கேட்கின்றனர். எப்படியோ சமாளித்து விடுகிறார் கண்ணன். ஜனார்த்தனன் கடைக்கு வருபவர்கள் பார்க் செய்வதற்காக இடத்தை பார்த்து வைக்கிறார். அப்பொழுது ஜீவா அந்த பக்கமாக செல்கிறார்.

அவரை அழைத்து கடையில் சிறிது நேரம் இருக்கும்படி சொல்கிறார். தன்னால் முடியாது, எங்க கடையில் வேலை இருக்கு என்று கூறி சென்று விடுகிறார். இதனால் கோவமடையும் ஜனார்த்தனன் பொட்டிக்கடைக்கு இவ்வளவு அலப்பறையா? என்று கூறி முறைக்கிறார்.

கர்ப்பமாக இருக்கும் தனத்திற்கு வயிறு தெரிய ஆரம்பிக்கிறது. இதனால் குடும்பமே சந்தோசப்படுகிறது. இதனை செல்பி எடுத்தும் கொண்டாடுகின்றனர். ஆனால் கடைசி வரைக்கும் கண்ணன் முகத்தில் ஒரு கலவரம் இருந்துகொண்டே தான் உள்ளது. அடுத்ததாக முல்லைக்கும், மீனாவுக்கும் வழக்கம் போல சண்டை ஆரம்பிக்கிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

நீங்க அப்பவே அப்படியா?? ராஷ்மிகாவின் கியூட்டான குழந்தை புகைப்படம்!!

கதிர் வந்து அப்படி இப்படி பேசி சமாதானம் செய்து வைக்கிறார். வீட்டிற்கு வரும் மூர்த்தி பீரோவில் இருக்கும் பணத்தை எடுத்துக்கொண்டு வர சொல்கிறார். முல்லை போய் பணத்தை தேடுகிறார். அங்கு இல்லாததை பார்த்து அதிர்ச்சியாகிறார். எல்லா இடத்திலும் சென்று தேட பணம் எங்குமே இல்லை. வீட்டில் உள்ளவர்களிடம் சென்று சொல்ல அனைவரும் அதிர்ச்சியாகின்றனர். இதோடு எபிசோடும் முடிவடைகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here