பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது கண்ணன் ஐஸ்வர்யா வீட்டை விட்டு வெளியேறியதை அடுத்து இருவரையும் தங்க வைக்க மீனா தன் அப்பாவிடம் போய் கெஞ்சுகிறார். மேலும் மூர்த்திக்கு திடீரென தலை சுற்றிக்கொண்டு வருகிறது.
பாண்டியன் ஸ்டோர்ஸ்
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஜீவாவும், கதிரும் குடவுனில் அனைத்து பொருட்களையும் எடுத்து வைத்து கொண்டுள்ளனர். அப்பொழுது கதிர் கடைசியாக கண்ணன் இங்கு வந்ததை பற்றி யோசிக்கிறார். ஜீவாவிடம் சொல்ல அவரும் இந்த கல்யாணத்தை தடுத்து இருக்கலாம் என்று சொல்கிறார்.
அப்பொழுது முல்லையின் அப்பா முருகன் அங்கு வருகிறார். அவரிடம் கண்ணனை பற்றி விசாரிக்கின்றனர். கண்ணன் வீட்டை விட்டு வெளியேறியதை பற்றி சொல்கிறார். இதனால் ஜீவா கதிர் சோகமடைகின்றனர். அடுத்ததாக தனம் எதையுமே சாப்பிடாமல் சோகத்திலேயே இருக்க அவரின் அம்மா திட்ட ஆரம்பிக்கிறார்.
குழந்தையின் நலனும் மிக முக்கியம் என்று சொல்கிறார். அடுத்ததாக முல்லை வந்து கண்ணன் ஐஸ்வர்யா வெளியே சென்றதை பற்றி சொல்ல தனம் அமைதியாக இருக்கிறார். மேலும் இது அவனுடைய தலையெழுத்து, அவனா தேடிகிட்டது என்றும் சொல்கிறார். ஆனால் முல்லை மீனாவிற்கு பயமாக உள்ளது.
அதாவது ஐஸ்வர்யாவை யாராவது வம்பிழுத்தாலோ, எதாவது செய்தாலோ கண்ணன் தனி ஆளாக என்ன செய்வான்?? அவனுக்கு அந்த அளவிற்கு தெம்பு கிடையாது என்று சொல்கிறார். இதனால் மீனா ஒரு முடிவெடுத்து அங்கிருந்து செல்கிறார். தன் அப்பாவை பார்த்து விட்டு வருவதாக சொல்கிறார்.
சூப்பர் மார்க்கெட்டுக்கு செல்லும் மீனா தன் அப்பாவிடம் கண்ணனை பார்த்து கொள்ளும்படி சொல்கிறார். ஒரு சின்ன வீடு அவர்களுக்கு கொடுத்தால் போதும் என்று கெஞ்சுகிறார். கடைசியில் இதற்கு ஒத்துக்கொள்கிறார் ஜனார்த்தனன். தனக்கு இது சுத்தமாக பிடிக்கவே இல்லை என்றும், நீ சொன்னதற்காக செய்கிறேன் என்றும் சொல்கிறார்.
அடுத்ததாக கடையில் மூர்த்திக்கு திடீரென தலை சுற்றி மயக்கம் வருகிறது. இதனை பார்த்து பதறிய கதிர் ஜீவாவிற்கு கால் செய்து டாக்டரை அழைத்து வருகிறார். மூர்த்தியை பார்த்த டாக்டர் டென்ஷன் இல்லாமல் இருக்க வேண்டும் என்று சொல்லி விட்டு செல்கிறார். இதோடு எபிசோடும் முடிவடைகிறது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்