பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது ஜனார்த்தனனை ஒருவன் அடித்ததால் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பமே கொந்தளித்து அவருக்காக சண்டையிடுகின்றனர்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் சூப்பர் மார்க்கெட்டில் பார்க்கிங்காக பிரச்சனை வர ஜனார்தனனை ஒருவர் அடித்தே விட்டார். இதனால் ரோடில் அனைவரும் கூடி விடுகின்றனர். மீனா இந்த விஷயத்தை கேள்விப்பட்டு துடிக்கிறார். வீட்டில் ஜீவாவிடம் விஷயத்தை எடுத்து சொல்ல மொத்த குடும்பமும் கோவமடைகிறது.
மூர்த்தியும் அவரை சும்மா விட கூடாது என்று தம்பிகளுடன் கிளம்புகிறார். ஜனார்தனனை அடித்த நபரை வெளுத்து வாங்குகின்றனர். ஜனார்த்தனன் இதனை சற்றும் எதிர்பார்க்கவில்லை. நாம் பிரிக்க வேண்டும் என்று நினைத்த குடும்பம் நமக்காக எவ்வளவு தூரம் செய்கின்றனர் என்று ஆச்சரியமடைகின்றார்.
அதன் பின் ஜனார்த்தனன் உங்களுக்கு ஒன்னுனா சும்மா இருப்போம்னு நெனச்சுக்காதீங்க. நீங்களும் எங்க குடும்பம் தான் என்று சொல்கிறார். அடுத்ததாக ஜனார்த்தனன் மீனாவிடம் தனக்கு மகன் இல்லாத குறையை மாப்பிள்ளை தான் தீர்த்து வைக்கிறாரு என்று பெருமிதமாக சொல்கிறார்.
மேலும் மாப்பிள்ளை நம்ம வீட்டோட இருந்தா இன்னும் நல்லா இருக்கும் என்று மீண்டும் பழைய கதையை ஆரம்பிக்க நீங்க திருந்தவே மாட்டீங்க என்று சொல்லி கிளம்புகிறார் மீனா. மேலும் ஜீவாவிடம் தன் அப்பாவிற்கு இவ்வளவு தூரம் இறங்கி வந்ததற்கு நன்றி என்று கூறி கண்கலங்குகிறார். இதோடு எபிசோடு முடிவடைகிறது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்