பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மீனா மற்றும் முல்லை இடையே ஏற்கனவே முட்டிக்கொண்டு உள்ளது. இந்நிலையில் முல்லை மீனாவை கிண்டல் செய்ய அது பிரச்சனையாக முடிகிறது. மேலும் முல்லை கதிரின் ரொமான்ஸ் சீன் வேறு எக்கச்சக்கமாக காட்டப்பட்டுள்ளது.
பாண்டியன் ஸ்டோர்ஸ்
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மீனா சமைக்கிறேன் என்ற பெயரில் கடலைப்பருப்பில் சாம்பார் வைத்து சொதப்பினார். அதன் பிறகு வேகமாக தனம் சமைத்து வர அதன் பிறகே சாப்பிட ஆரம்பித்தனர். மீனாவை முல்லையும், தனமும் கிண்டல் செய்கின்றனர்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
எப்படியாவது இங்கிருந்து சென்றால் போதும் என்று சமாளித்து செல்கிறார். அதன் பின் மீனாவின் அம்மா கால் செய்ய சமையலில் நடந்தவற்றை சொல்கிறார். தேவையில்லாமல் நீ எதுக்காக இப்படி சமைக்க போன என்று ஏத்தி விடுகிறார். இதனை தூரத்தில் இருந்து கேட்ட தனம் விழுந்து விழுந்து சிரிக்கிறார்.
அடுத்ததாக முல்லையும் கதிரும் ரூமில் உட்கார்ந்து பேசிகொண்டுள்ளனர். இத்தனை நாள் உங்களை மீனா எவ்வளவு கேவலமா பேசுனாங்க. இப்போ பாத்திங்களா?? என்று வில்லத்தனமான சிரிக்கிறார். உங்களை யாராவது எதாவது சொன்ன கண்டிப்பா நான் இப்படி தான் பண்ணுவேன் மாமா என்று கூறுகிறார்.
கெத்து காட்டிய ட்விட்டர் – வாட்ஸ் ஆப், இன்ஸ்டா கதறல்!!
வர வர உனக்கு கொழுப்பு கூடிடுச்சு என்று கிண்டலடிக்கிறார் கதிர். சித்ராவின் இடத்தையும் கிட்டத்தட்ட பிடித்து விட்டார் காவியா. முல்லையின் இந்த முகம் கதிருக்கு புதிதாகவே தெரிகிறது. இதுவரைக்கும் அப்பாவி முகத்தை தானே நான் பாத்திருக்கேன். இப்போ என்ன இந்த முகம் என்று ரொமான்ஸை லைட்டாக ஆரம்பிக்க முல்லை வேகமாக எழுந்து செல்கிறார்.
ஹாலில் தனமும், முல்லையும் அமர்ந்து பேசிகொண்டுள்ளனர். அப்பொழுது பார்த்து மீனா வர மறுபடியும் முல்லை கிண்டலடிக்கிறார். இதனால் கடுப்பான மீனா இந்த நிலைமை உங்களுக்கும் ஒரு நாள் வரும் அப்போ இதை விட நான் கிண்டல் பண்ணி சிரிப்பேன் என்று சொல்கிறார்.
அடுத்ததாக கண்ணன் வர அனைவரையும் பார்த்து முழிக்கிறார். அனைவருக்கும் எதோ தவறாக படுகிறது. என்ன என்று கேட்க எதுவும் சொல்லாமல் இருக்கிறார். இதோடு எபிசோடும் முடிவடைகிறது.