காரைக்குடி கோவிலில் ஐஸ்வர்யாவை திருமணம் செய்ய பிளான் போடும் கண்ணன் – கடைசி நேரத்தில் ஸ்பாட்டுக்கு வரும் ஜீவா!!

0

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது ஐஸ்வர்யா கண்ணனுக்காக வீட்டை விட்டு வெளியே வர உன்னை கைவிட மாட்டேன் என்று வாக்கு கொடுக்கிறார். மேலும் திருமணம் செய்ய முடிவெடுக்கின்றனர்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது விறுவிறுப்பான கட்டங்களுடன் நகர்ந்து கொண்டுள்ளது. ஐஸ்வர்யா பிரஷாந்த் திருமணத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் நடந்து கொண்டுள்ளது. மேலும் பிரஷாந்த் ஐஸ்வர்யாவை மிரட்டி விட்டு செல்கிறார். இதனால் ஐஸ்வர்யா வீட்டை விட்டே வெளியேறுகிறார்.

அப்பொழுது கண்ணனும் அங்கு இருக்க அவர் மீது கோவப்படுகிறார் ஐஸ்வர்யா. நான் எங்கயாச்சும் போய் இருந்துக்குறேன் என்று சொல்கிறார். என்னை நம்பி வீட்டை விட்டு வெளியே வந்த உன்னை நான் கை விட மாட்டேன் என்று சொல்கிறார். எங்க வீட்டுல என்ன கொஞ்சம் கூட மதிக்கல.

ஆனால் நீ என்ன நம்பி வந்துட என்று கண்கலங்குகிறார். அடுத்ததாக தனம் கண்ணன் இன்னும் வீட்டிற்கு வராததை நினைத்து கவலைப்படுகின்றனர். மேலும் வீட்டில் திருடிய அந்த பணத்தை ஐஸ்வர்யாவிற்கு காலேஜ் பீஸ் கட்டிய விஷயத்தையும் முல்லை சொல்ல மீண்டும் தனம் அதிர்ச்சியாகிறார்.

தனத்தின் அம்மா ஐஸ்வர்யா இந்த குடும்பத்திற்கு ஒத்து போக மாட்டாள் எனவும், யார் பேச்சையுமே கேக்க மாட்டாள் எனவும் சொல்கிறார். அடுத்ததாக கண்ணன் அவரது நண்பர்களை அழைத்து விஷயத்தை சொல்ல கண்ணன் ஐஸ்வர்யாவிற்கு திருமணம் செய்து வைக்கலாம் என்று முடிவெடுக்கின்றனர்.

இதற்கு கண்ணனும் ஒத்து கொள்கிறார். நண்பர்கள் அனைவரும் பேசி தயாராக கடைசியாக காரைக்குடி கோவிலில் திருமணத்தை வைக்கலாம் என்று முடிவெடுக்கின்றனர். அதற்கான ஏற்பாடுகளையும் செய்கின்றனர். ஐஸ்வர்யாவிற்கு பிரஷாந்த் வந்து விடுவானோ என்ற பயம் வேறு. அப்பொழுது ஜீவா அந்த வழியாக வர கண்ணனை பார்த்து விடுகிறார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here