ஐஸ்வர்யாவை மறக்கும் படி கண்ணனை கட்டாயப்படுத்தும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் – கேள்விக்குறியாகும் ஐஸ்வர்யாவின் நிலை!!

0

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கண்ணனுக்கு வீட்டில் அனைவரும் ஐஸ்வர்யா பின்னால் போக வேண்டாம் என்று பல அட்வைஸ்களை கொடுக்கின்றனர். இதனால் ஐஸ்வர்யாவின் நிலை மோசமாகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கஸ்தூரி மூர்த்தி வீட்டிற்கு வந்து கண்ணனும் ஐஸ்வர்யாவும் ஒன்றாக சுற்றி திரிவதை பற்றி சொல்ல வீடே கொந்தளிக்கிறது. இதனால் ஒட்டுமொத்தமாக கண்ணனை திட்டுகின்றனர். நிச்சயம் ஆன பெண்ணுடன் உனக்கு என்ன பேச்சு என்று கொந்தளிக்கின்றனர்.

கண்ணனை நினைத்து தான் அனைவருமே புலம்பிக்கொண்டுள்ளனர். ஜீவா வந்து கண்ணனிடம் பக்குவமாக எடுத்து சொல்கிறார். இதெல்லாம் தப்பு இனிமேல் இப்படி பண்ண கூடாது என்றும் சொல்கிறார். மூர்த்தியும் உனக்கு தேவையான அனைத்தையும் நாங்கள் செய்யும் போது ஏன் இப்படி பண்ற உனக்கு 22 வயசாச்சு ஒழுங்கா படி 25 வயசுல உனக்கு கல்யாணம் பண்ணி வைக்கலாம் என்று சொல்கிறார்.

கண்ணனுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. எப்படி ஐஸ்வர்யா விஷயத்தை வீட்டில் சொல்ல போகிறோம் என்று குழம்பி போயுள்ளார். அடுத்ததாக ஐஸ்வர்யா தனத்தின் வளைகாப்பு விழாவில் என்று டிரஸ் போடுவது என்று கேட்கிறார். ஆனால் கஸ்தூரி நீ வரவேண்டாம் என்று கூறுகிறார். கஸ்தூரியின் கணவர் ஏன் என்று கேட்க அங்கு பிரஷாந்த் வருவான் என்றும் இவள் கண்ணனை பார்த்து பல்லு இளிப்ப என்றும் சொல்கிறார்.

அடுத்ததாக கஸ்தூரியின் கணவர் ஐஸ்வர்யாவிடம் பேசுகிறார். கண்ணன் உனக்கு செட் ஆக மாட்டான். அவன் படிச்சு முடிச்சுட்டு வர இன்னும் 5 வருஷம் ஆகும். அதுவரைக்கும் உன்னால உன் சித்தி ஓட கொடுமையை தாங்க முடியாது என்று சொல்கிறார். இதனால் ஐஸ்வர்யா மேலும் குழம்பி போகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here