‘மூர்த்தி குடும்பத்தை பிரிச்சு ஜீவாவையோ வீட்டோட மாப்பிள்ளையாக்கி காட்றேன்’ – சவால் விடும் ஜனார்த்தனன்!!

0

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது கண்ணன் பணத்தை எடுத்து ஐஸ்வர்யாவிடம் கொடுத்து ஃபீஸ் கட்ட சொல்கிறார். இதனால் முல்லை மீது பழி விழுங்கவும் வாய்ப்புள்ளது. மேலும் என்னென்ன பிரச்சனைகள் நடக்க போகிறது என்று தெரியவில்லை.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

முந்தைய எபிசோடில் கண்ணன் ஐஸ்வர்யாவின் காலேஜ்காக பணத்தை எடுக்க திட்டம் போட்டார். மேலும் முல்லை மற்றும் கதிர் இடையே ரொமான்ஸ் சீனும் காட்டப்பட்டது. இந்நிலையில் கதிர், முல்லை அனைவரும் வீட்டில் இருக்க எப்படி பணத்தை எடுப்பது என்று யோசித்துக்கொண்டுள்ளார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

கதிர் கடைக்கு சென்றதும் வேகமாக சாவியை எடுத்து பணத்தை எடுக்கிறார். அடுத்ததாக ஜீவா கடைக்கு கிளம்பிக்கொண்டிருக்கிறார். மீனா வந்து அப்பாவின் கடைக்கு போக சொல்லி சொல்கிறார். அதெல்லாம் தன்னால் முடியாது என்று கூறுகிறார்.

என்னடா தனுஷுக்கே வந்த சோதனை – “கர்ணன்” படத்தின் மீது வழக்கு!!

இப்படி வாய் தகராறு ஆக கடைசில் இந்த குடும்பத்தை கெடுக்க நீ இருக்க கடையை கெடுக்க உங்க அப்பா இருக்காரு என்று வார்த்தையை விடுகிறார். மேலும் அந்த இடத்தை விட்டு செல்கிறார். அடுத்ததாக கண்ணன் ஐஸ்வர்யாவை வரவழைத்து அழைத்து செல்கிறார். கடைசியில் ஃபீஸ் கட்ட காசு கொடுக்கிறார்.

இதனை அவரது நண்பர்கள் பார்த்துவிட்டு ஏது இந்த பணம் என்று கேட்கின்றனர். வீட்டில் இருந்து திருடியதாக ஒப்புக்கொள்கிறார் கண்ணன். இப்பொழுது வீட்டிற்கு எப்படி செல்வது என்று தான் தெரியவில்லை என்று யோசனையாக இருப்பதாக கவலைப்படுகிறார்.

மேலும் ஐஸ்வர்யா இப்படி கஷ்டப்படுவதை தன்னால் தாங்க முடியவில்லை என்றும் கூறுகிறார். நாளடைவில் இதுவே காதலாக மாறவும் வாய்ப்புள்ளது. ஏனெனில் கண்ணனுக்கு ஜோடி ஐஸ்வர்யா தான். அப்படி இருக்க இவர்களுக்கு எப்படி காதல் மலர போகிறது என்பதை பொறுத்திருந்து பாப்போம். இந்த பக்கம் ஜனார்த்தனன் மூர்த்தி குடும்பத்தை பிரித்து காட்டுவேன் என்று சவால் விடுகிறார். ஜீவாவை தன்னுடன் வைத்துக்கொள்ளவும் திட்டம் போடுகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here