பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது கண்ணன், ஐஸ்வர்யா போக இடம் இல்லாமல் தவித்து கொண்டுள்ளனர். மேலும் கதிர் அவர்களுக்கு உதவ முடியாமல் தவித்து வருகிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்
ஐஸ்வர்யாவும் கண்ணனும் கஸ்தூரி வீட்டிற்கு செல்ல அங்கு பெரிய பிரச்சனையே ஏற்படுகிறது. பிரஷாந்த் மறுபடியும் கண்ணனை அடிக்க வர அப்பொழுது கதிர் வந்து காப்பற்றுகிறார். கண்ணன் அண்ணா என்று கையை பிடிக்க கதிர் உதறி தள்ளிவிட்டு செல்கிறார்.
கண்ணன் ஐஸ்வர்யா அங்கிருந்து செல்ல என்ன செய்வதென்று தெரியாமல் முழித்து கொண்டுள்ளனர். கண்ணன் ஐஸ்வர்யாவை எப்படி பார்த்து கொள்ள போகிறோம் என்று தெரியாமல் தவித்து கொண்டுள்ளார். அப்பொழுது கதிரும் மூர்த்தியும் வண்டியில் அந்த பக்கம் வர அப்பொழுது கோவில் வாசலில் இருவரையும் பார்த்து கதிர் வண்டியை நிறுத்துகிறார்.
ஆனால் மூர்த்தி கோவமாக அங்கிருந்து கிளம்ப சொல்கிறார். கதிருக்கு கண்ணனை நினைத்து பாவமாக உள்ளது. அதே சமயம் அண்ணனை நினைத்து எதுவுமே செய்ய முடியாமல் தவிக்கிறார். இதனால் கோவமடையும் கண்ணன் ஐஸ்வர்யா என்ன செய்வதென்றே தெரியாமல் உள்ளனர்.
இதோடு எபிசோடும் முடிவடைகிறது. இந்நிலையில் அடுத்த கட்டத்தில் என்ன நடக்க போகிறது என்ற செய்தியும் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது கண்ணன் ஐஸ்வர்யா தங்க இடம் இல்லாமல் தவிக்க தன் அண்ணன் வீட்டிற்கே வருகிறார். வீட்டில் உள்ள அனைவரையும் கதவை திறக்க கூடாது என்று சொல்கிறார் மூர்த்தி. என்ன நடந்தாலும் இருவரையும் உள்ளே சேர்க்க கூடாது என்று பிடிவாதமாக இருக்கிறார்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்