பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது பல இக்கட்டான சூழ்நிலைகள் நிலவி வருகிறது. ஒரு பக்கம் ஐஸ்வர்யாவிற்காக கண்ணன் வீட்டில் பணத்தை திருட திட்டமிடுகிறார். மற்றொரு பக்கம் தனம் கீழே விழுந்ததற்கு முழு காரணம் மீனா தான். இதனால் என்னென்ன பிரச்சனைகள் நடக்க போகிறது என்று தான் தெரியவில்லை.
பாண்டியன் ஸ்டோர்ஸ்
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஜனார்த்தனன் சூப்பர் மார்க்கெட் கட்டியது மூர்த்தி குடும்பதியில் பல பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. கடையில் வியாபாரமும் இல்லாமல் தவித்து வருகின்றனர். ஜீவா வீட்டிற்கு கிளம்ப வேண்டும் என்று அவசரத்தில் உள்ளார்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
ஜனார்தனனும் வந்து விட சொல்லிவிட்டு மீனாவும், ஜீவாவும் கிளம்புகின்றனர். அப்பொழுது பார்த்து வண்டி நின்று விடுகிறது. மீனா பழைய கதையை ஆரம்பிக்கிறார். அக்காவுக்கு தான் சரியாகிடுச்சுல, வீட்டுல மத்தவங்க வந்திருக்கலாம்ல என்று சொல்ல ஜீவா உனக்கு கொழுப்பு தான் என்று திட்டுகிறார்.
மேலும் யாரோ வாஷிங் மெஷினில் இருந்து சோப்பு தண்ணீரை அப்படியே போட்டதால் தனம் கீழே விழுந்ததாக சொல்கிறார். அப்பொழுது தான் மீனாவிற்கு நியாபகம் வருகிறது. அதை செய்தது தாம் தான் என்று. முல்லை சொல்லி கொடுத்து விடுவாளோ என்று யோசிக்கிறார்.
பெண்கள் ஓட்டை கவரும் எடப்பாடி – இது என்ன புது யுக்தியா?? ஜெயிக்குமா அதிமுக அரசு!!
அடுத்ததாக மூர்த்தி கடையில் இருந்து வீட்டிற்கு வருகிறார். வீட்டில் கடையில் இன்றைக்கு வியாபாரம் ஆகாததை பற்றி கூறுகிறார். இதனால் தனம் அதிர்ச்சியாகிறார். தனம் முல்லையிடம் பணத்தை கொடுத்து பீரோவில் வைக்க சொல்கிறார்.
இதனை கண்ணன் தூரத்தில் இருந்து பார்க்கிறார்.ஐஸ்வர்யா கல்லூரி ஃபீஸ்கட்ட காசு இல்லை என்று சொன்னது நியாபகத்திற்கு வருகிறது. இந்த பணத்தை எடுக்கலாமா?? என்று யோசிக்கிறார். இதோடு எபிசோடும் முடிவடைகிறது.