‘கதிரோட இந்த ஐடியா எல்லாம் சரிப்பட்டு வர மாதிரி தெரியல’ – பதட்டமடையும் மூர்த்தி!!

0

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது கடையை விரிவு படுத்துவதற்காக பல வேலைகளை செய்து வருகின்றனர். கதிரின் ஐடியா ஜெயிக்குமா?? என வீட்டில் உள்ள அனைவரும் பதட்டத்திலேயே உள்ளனர்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் டோர் டெலிவரி செய்வதற்காக போஸ்டரை எல்லா இடங்களிலும் ஓட்டுகின்றனர். தனம் இதனை பார்த்து சந்தோஷமாகிறார். கல்யாணம் ஆன புதிதில் நீங்க இப்படி தான் யோசிப்பீங்க என்று சொல்ல பழைய நியாபகம் வருகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மேலும் தற்போது உங்களுக்கு துணையாக 2 தம்பிகள் இருக்கின்றனர் என்றும் தனம் கூறுகிறார். அடுத்ததாக அனைவரும் கடைக்கு செல்கின்றனர். கடையில் போஸ்டர் ஒட்டியதை பற்றி பேசிகொண்டுள்ளனர். ஜனார்த்தனன் சூப்பர் மார்க்கெட்டை மூடினால் தான் நம் கடை நன்றாக வரும் சொல்கின்றனர்.

இருந்தாலும் நாம் யோசித்திருக்கும் ஐடியா நன்றாக வரும் என்று நம்பிக்கை உள்ளது என ஜீவாவும் கதிரும் கூறுகின்றனர். அடுத்ததாக யாரவது கால் செய்வார்களா என்றும் காத்துக்கொண்டுள்ளனர். இன்னும் யாரும் கால் செய்யாததை நினைத்து இது சரி பட்டு வராது என்று கதிரின் மாமா கிண்டலடிக்கிறார்.

அப்பொழுது ஒரு வீட்டில் இருந்து கால் வருகிறது. முதல் டெலிவரியே பால் பாக்கெட் வந்ததால் சந்தோஷமடைகின்றனர். ஆனால் கதிரின் மாமா இதனை நினைத்து சிரிக்கிறார். அனைவர்க்கும் ஒரு மாதிரியாக இருந்தாலும் வெளியில் காட்டிக்கொள்ளாமல் இருக்கின்றனர்.

தமிழகத்தில் இந்த 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் அறிவிப்பு!!

இதெல்லாம் வேலைக்கு ஆகாது என்று மூர்த்தி சொல்ல ஜீவா சமாதானம் செய்கிறார். அந்த வீட்டில் கதிர் வந்ததும் பாராட்டுகின்றனர். எந்த ஊரிலும் இது போல் இருந்தது இல்லை என்றும் கூறுகின்றனர். அடுத்ததாக ஒருவர் கால் செய்ய நம்பர் சரிதானா என்று பார்ப்பதற்காக கால் செய்ததாக சொல்கிறார்.

அடுத்து ஒருவர் பருப்பும், எண்ணெயும் கேட்டு கால் செய்கின்றனர். இதனால் சந்தோஷமடைகின்றனர். கதிரின் மாமா இதெல்லாம் சரிப்பட்டு வராது என்று சொல்லிக்கொண்டே உள்ளார். இதனால் அவரது வாயை செலோ டேப் வைத்து ஒட்டி விடுகின்றனர். இன்றைய எபிசோடு முழுக்க ஒரு பதட்டத்திலேயே ஓடிக்கொண்டிருந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here