தன் அம்மா இறப்பது போல கனவு கண்டு கதறி அழும் கதிர் – விறுவிறுப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் கதைக்களம்!!

0
தன் அம்மா இறப்பது போல கனவு கண்டு கதறி அழும் கதிர் - விறுவிறுப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் கதைக்களம்!!
தன் அம்மா இறப்பது போல கனவு கண்டு கதறி அழும் கதிர் - விறுவிறுப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் கதைக்களம்!!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் லட்சுமி கண்ணனை பற்றி புலம்பிக்கொண்டிருக்க இதனால் கதிருக்கு அவரை நினைத்து மிகவும் வருத்தமாகிறது. மேலும் அவருக்கு அம்மா இறந்தது போல கனவு வேறு வருகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தற்போது எதிர்ப்பாராத பல திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில் தான் தற்போது கண்ணன் திருமணம் நடந்ததில் இருந்தே வீடே சோகமாக உள்ளது. இதில் அதிகம் பாதிக்கப்பட்டது கண்ணனின் அம்மா லட்சுமி தான்.

தன் அம்மா இறப்பது போல கனவு கண்டு கதறி அழும் கதிர் - விறுவிறுப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் கதைக்களம்!!
தன் அம்மா இறப்பது போல கனவு கண்டு கதறி அழும் கதிர் – விறுவிறுப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் கதைக்களம்!!

செல்ல பிள்ளையாய் வளர்ந்தவன் இப்படி செய்து விட்டு கஷ்டப்படுகிறானே என்று தினமும் அழுதுக்கொண்டே உள்ளார். இன்றைய எபிசோடில் தனத்திடம் குழந்தை பிறப்பதை பற்றி பேசிகொண்டுள்ளார். கண்ணனை பற்றியும் பேச தனத்திற்கு ஒரு மாதிரி ஆகிறது.

தன் அம்மா இறப்பது போல கனவு கண்டு கதறி அழும் கதிர் - விறுவிறுப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் கதைக்களம்!!
தன் அம்மா இறப்பது போல கனவு கண்டு கதறி அழும் கதிர் – விறுவிறுப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் கதைக்களம்!!

அதோடு இல்லாமல் உன் குழந்தைக்கு நான் எங்க இருந்தாலும் ஆசீர்வாதம் பண்ணுவேன் என்று வார்த்தையை விடுகிறார். நீங்க எப்போவுமே இங்க தான் இருப்பீங்க என்று சொல்கிறார் தனம். அதன் பிறகு தனம் மூர்த்தி மற்றும் தம்பிகளுடன் இணைந்து பேசிகொண்டுள்ளார்.

தன் அம்மா இறப்பது போல கனவு கண்டு கதறி அழும் கதிர் - விறுவிறுப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் கதைக்களம்!!
தன் அம்மா இறப்பது போல கனவு கண்டு கதறி அழும் கதிர் – விறுவிறுப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் கதைக்களம்!!

அத்தைக்கு கண்ணனை நினைத்து என்னவோ போல இருப்பதாக சொல்லி கொண்டுள்ளார். அடுத்ததாக கதிர் மற்றும் ஜீவா அம்மாவை சென்று பார்க்கின்றனர். அப்பொழுது லட்சுமி தூங்கிக்கொண்டிருக்க அவர்களும் தூங்க செல்கின்றனர். கதிர் ஆழ்ந்த உறக்கத்திற்கு செல்ல அப்பொழுது லட்சுமி ஆவியாக கனவில் வருகிறார்.

தன் அம்மா இறப்பது போல கனவு கண்டு கதறி அழும் கதிர் - விறுவிறுப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் கதைக்களம்!!
தன் அம்மா இறப்பது போல கனவு கண்டு கதறி அழும் கதிர் – விறுவிறுப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் கதைக்களம்!!

கதிர் அம்மா என்று அழைக்க சிரித்துக்கொண்டே செல்கிறார். இந்த கனவால் கதிர் பதறி எழுகிறார். முல்லை அவருக்கு ஆறுதலாக இருக்க ஆனால் கதிருக்கு மனசு கேட்கவில்லை. தன் அம்மாவை பார்க்க செல்கிறார். லட்சுமியை தொட்டு பார்த்ததும் தான் கதிருக்கு உயிரே வருகிறது. தன் கனவு பழித்து விடுமோ என்று கதறி அழுகிறார். இதோடு எபிசோடும் முடிவடைகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here