மூர்த்தி, கதிரை வெறுப்பேற்றி பார்க்கும் ஐஸ்வர்யா – அதிர்ச்சியில் உறைந்த மீனா!!

0

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கண்ணன் ஐஸ்வர்யா தற்போது எதிர் வீட்டிற்கு குடி வந்துள்ள நிலையில் தனம் கண்ணன் சாப்பிட்டானா?? இல்லையா?? என்று மனதிற்குள் புலம்பிக்கொண்டே உள்ளார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

கண்ணன், ஐஸ்வர்யா என்ன தான் வீட்டை எதிர்த்து திருமணம் செய்தாலும் மூர்த்தி குடும்பத்தால் அவர்களை மொத்தமாக வெறுக்க முடியவில்லை. இப்பொழுது கண்ணன் ஐஸ்வர்யா எதிர் வீட்டிலேயே குடி வந்துள்ளனர். இது ஓரளவிற்கு தனத்திற்கு சந்தோசமாக உள்ளது.

கண்ணனின் அனைத்து நடவடிக்கையையும் பார்த்து கொண்டுள்ளார். இருவரும் படிப்பை கை விடாமல் இருப்பது அனைவருக்கும் நிம்மதியாக உள்ளது. இந்நிலையில் கண்ணன் ஐஸ்வர்யா வேலைக்கு சென்று இரவு அதிக நேரமாகியும் வராததை நினைத்து தனம் வாசலிலேயே காத்து கொண்டுள்ளார்.

அப்பொழுது தனக்காக தான் அண்ணி நின்று கொண்டிருப்பது கண்ணனுக்கு தெரிந்ததும் சத்தமாக நான் சாப்பிட போறேன் என்று சொல்கிறார். அதன் பிறகு தான் தனம் வீட்டிற்கு செல்கிறார். இரவு தூங்கும்போது வீட்டில் கரண்ட் போய் விட கயல் பாப்பா அழுக ஆரம்பிக்க வெளியே அழைத்து வருகின்றனர்.

அப்பொழுதும் அழுகையை நிறுத்தாமல் இருக்க கண்ணன் கயல் பாப்பாவை பார்த்து விசில் அடிக்கிறார். இதனால் கயல் பாப்பா சிரிக்க ஆரம்பிக்கிறது. அதன் பின் கரண்ட் வந்து விட ஜீவா மீனா உள்ளே செல்கின்றனர்.

காலையில் எழுந்ததும் மூர்த்தி கடைக்கு கிளம்ப தயாராக அப்பொழுது வெளியே வரும் ஐஸ்வர்யா மூர்த்தி மற்றும் கதிரை வம்புக்கு இழுக்கிறார். சின்ன மாமா, பெரிய மாமா டீ குடிக்கிறிங்களா?? என்று கேட்கிறார். இதனை பார்த்த மீனா எவ்வளவு தைரியம் இந்த பொண்ணுக்கு என்று ஷாக்காகிறார். இதோடு எபிசோடு முடிவடைகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here