பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது கண்ணன் ஐஸ்வர்யா கடையில் பொறுப்பாக வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் தான் கண்ணன் முதன்முறையாக லோடு ஏற்றுவதற்காக திருச்சி வரை செல்ல ஒப்புக்கொள்கிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நாளுக்கு நாள் பல விறுவிறுப்பான கட்டங்கள் ஒளிபரப்பாகி வருகிறது. கண்ணன், ஐஸ்வர்யா வேலை இல்லாமல் சுற்றி திரிய மீனாவால் ஜனார்த்தனன் அவர்களுக்கு வேலை கொடுக்கிறார். ஐஸ்வர்யா மற்றும் கண்ணன் இணைந்து தங்களது வேலையை சிறப்பாக செய்கின்றனர்.
ஆனால் கண்ணனால் மூட்டை தூக்குவது சிரமமாக உள்ளது. தன் வீட்டில் ராஜா போல வாழ்ந்தது நியாபகத்திற்கு வருகிறது. ஆனாலும் கண்கலங்கிக்கொண்டே வேலை பார்க்கிறார் கண்ணன். ஐஸ்வர்யா கண்ணனுக்கு பக்கபலமாக இருப்பதால் அவருக்கு மிகவும் ஆறுதலாகவும் உள்ளது.
சரக்கை டெலிவரி செய்ய போகும்போது தன் வீட்டை தாண்டி செல்ல அங்கேயே நின்று விடுகிறார். அண்ணியை பார்க்க வேண்டும் என்று சொல்ல தனத்தின் அம்மா வந்து சத்தம் போடுகிறார். ஆனாலும் கண்ணன் அங்கேயே நிற்க தனம் வெளியே வராமல் கண்கலங்குகிறார்.
அடுத்ததாக ஜனார்த்தனன் கடையில் 10 மணிக்கு கடையை பூட்ட தயாராகின்றனர். அப்பொழுது கடைசியில் கண்ணன் போனை உள்ளேயே வைத்து விடுகிறார். ஜனார்த்தனன் வேறு அதிகாலையில் லோடு ஏற்றுவதற்காக திருச்சி வரை போக சொல்கிறார். கண்ணனும் அதற்கு ஒத்துக்கொள்கிறார்.
இதிலிருந்தே எதோ சம்பவம் நடக்க போகிறது என்று மட்டும் தெரிகிறது. மேலும் பாண்டியன் ஸ்டோர்ஸ் வீட்டில் குடும்பத்தார் முன்பை போலவே கலகலப்பாக தனது வேலையை பார்த்து கொண்டுள்ளனர். இதோடு எபிசோடும் முடிவடைகிறது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்