கண்ணன் தனக்கு காலேஜ் ஃபீஸ் கட்டிய விஷயத்தை முல்லையிடம் உளறும் ஐஸ்வர்யா – கண்ணனின் நிலை என்ன??

0

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கண்ணன் ஐஸ்வர்யாவின் நடவடிக்கையை பார்த்து மீனா கோவமடைகிறார். மேலும் கண்ணன் சமாளிக்க தனத்திற்கு இது சரியாக படவில்லை. மேலும் ஐஸ்வர்யா தனத்தை எதிர்த்து பேசுகிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இதுவரையிலும் சந்தோசமாக போய்க்கொண்டிருந்த குடும்பத்தில் ஐஸ்வர்யாவால் மீண்டும் பிரச்சனை ஏற்படுகிறது. அடுத்ததாக கண்ணனும் ஐஸ்வர்யாவும் தனியாக அமர்ந்து பேசிக்கொண்டிருக்க அதனை பார்த்து தனம் கோபமடைந்து திட்டுகிறார். அதற்கு ஐஸ்வர்யா குறுக்க குறுக்க பேசுகிறார். இதனால் தனம் கோவமடைகிறார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

ஐஸ்வர்யா தேவையில்லாமல் எதுக்கு இப்படி பேசுறீங்க என்று கேட்க தனம் அவரை உள்ளே போக சொல்கிறார். கண்ணனை தனம் கண்டபடி திட்டி அடிக்கிறார். முல்லையும் வந்து அன்றைக்கு இவர்கள் ஊர் சுற்றியதை சொல்ல தனம் மூர்த்தியிடம் சொல்ல போவதாக சொல்கிறார். அடுத்து முல்லை ஐஸ்வர்யாவை சமாதானம் செய்கிறார்.

தனம் அக்கா பாவம் எல்லாம் கிடையாது, சரியான ஆளு என்று சொல்கிறார். என்னால் தான் கண்ணன் மாமா திட்டு வாங்குது பாவம் என்று சொல்கிறார். மேலும் பேசிக்கொண்டிருக்கும் போது தன் கல்லூரி கட்டணத்தை கண்ணன் தான் கட்டியதாக சொல்கிறார். இதனால் முல்லைக்கு சந்தேகமாகிறது.

அடுத்து கண்ணனுக்கு கால் வந்து கொண்டே உள்ளது. ஐஸ்வர்யாவை கண்ணனிடம் அனுப்பி வைக்க சொல்கிறார் கஸ்தூரி. ஆனால் தனம் ஐஸ்வர்யாவை மூர்த்தியிடம் அனுப்பி வைக்கிறார். அடுத்து ஐஸ்வர்யா ஃபீஸ் நீ தான் காட்டுனியா?? என்று கேட்கிறார். கண்ணன் ஒத்துக்கொள்கிறார்.

2021ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள் அறிவிப்பு – முழு விவரம் இதோ!!

அந்த பணத்தை தான் எடுத்து பீஸ் கட்டியதாக சொல்கிறார். மேலும் கண்ணன், தனம் மற்றும் முல்லை அனைவரும் அமைதியாக உள்ளனர். இதனால் மாறி மாறி கேள்வி கேட்கின்றனர். அவனை தனம் திட்டியதாக சொல்கிறார். அதோடு எபிசோடும் முடிவடைகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here