பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் சமீபகாலமாக ஹாட் டாப்பிக்காக இருந்து வருபவர்கள் கண்ணன் மற்றும் ஐஸ்வர்யா. இந்நிலையில் தற்போது இதில் ஐஸ்வர்யாவாக நடித்து வந்த விஜே தீபிகா தீடிரென விலகி உள்ளார். இந்நிலையில் இவர் அந்த சீரியலின் நினைவுகளை கோர்வையாக வைத்து தனது இன்ஸ்டாவில் ஒரு வீடியோவை வெளியிட்டு உள்ளார்.
மளிகை கடை நடத்தி வரும் மூர்த்தி அவரின் மூன்று தம்பிகளை மையமாக வைத்து பாண்டியன் ஸ்டோர்ஸ் கதை போய்க்கொண்டிருக்கிறது. இதில் சமீபத்திய கதையாக, வீட்டில் செல்லமாக வளர்க்க பட்ட கடைசி தம்பி கண்ணன், ஐஸ்வர்யாவை வீட்டிற்கு தெரியாமல் செய்து கொண்ட திருமணத்தால் வீட்டில் உள்ளவர்களும் சரி, கண்ணன் மற்றும் ஐஸ்வர்யாவும் சரி மனதளவில் மிகுந்த கஷ்டத்தை அனுபவிக்கின்றனர்.
என்னதான் கோபம் இருந்தாலும் மூர்த்தி மற்றும் அவரின் குடும்பத்தினர் கண்ணன் மற்றும் ஐஸ்வர்யாவுக்கு பலவிதத்தில் உதவி வருகின்றனர். இந்நிலையில் கண்ணனை நினைத்து வேதனையில் உடல் நலம் சரியில்லாமல் மரணத்தை சந்திக்கும் நிலையில் இருக்கிறார் லட்சுமி. இவ்வாறு அந்த சீரியல் கதை பல விறுவிறுப்பான காட்சிகளுடன் ஓடிக்கொண்டிருக்கிறது.
View this post on Instagram
இந்நிலையில் ஐஸ்வரியாவாக நடித்து வரும் விஜே தீபிகா இந்த சீரியலை விட்டு தீடிரென விலகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. இதை உறுதி செய்யும் வகையில் பல சமூக வலைதள பதிவுகள் மற்றும் செய்திகள் வந்த நிலையில் தற்போது இவர் தனது இன்ஸ்டாவில் பாண்டியன் ஸ்ட்ரோஸ் சீரியலில் தானும் கண்ணன் சேர்ந்து வாழ்ந்த வீட்டில் நின்று கொண்டு பழைய நினைவுகள் கோர்வையாக வர ஒரு வீடியோவை ஷேர் செய்து உள்ளார். அதோடு சேர்த்து ஒரு கேப்சனையும் பதிவிட்டு உள்ளார்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்