ராதிகாவை கையெழுத்து போட விடாமல் தடுத்து நிறுத்தும் பாக்கியா – கோபியின் நிலை??

0

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது பாக்கியலட்சுமி குடும்பமும் இணைந்து மகா சங்கமமாக ஒளிபரப்பாகி வருகிறது. இன்றைய எபிசோடில் ராதிகா ஜனார்த்தனனுக்கு குடவுன் இடத்தை விற்க ரெஜிஸ்ட்ரேசன் ஆபீஸுக்கு கிளம்புகிறார். மேலும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் ராதிகாவிற்காக காத்துக்கொண்டுள்ளனர்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

முந்தைய எபிசோடில் கோபி ராதிகாவுடன் தனியாக தங்கி இருக்க இந்த இடத்தை விற்றதும் காரைக்குடி வரை சென்று டைம் ஸ்பென்ட் பண்ணலாம் என்று யோசிக்கிறார். இத்தனை நாள் வேலை டென்ஷனால் சரியாக பேச முடியவில்லை என்றும் கூறுகிறார்.

இதற்கு ஒத்துக்கொள்கிறார் ராதிகா. அடுத்ததாக பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் மொத்தமும் பொங்கல் வைப்பதற்காக தயார் நிலையில் உள்ளனர். வெளியில் மூர்த்தி ராதிகாவுக்காக காத்துக்கொண்டுள்ளார். மூர்த்திக்கு இது எதோ ஒரு நெருடலாகவே உள்ளது. எத்தனை கால் செய்தும் ராதிகா எடுக்கவும் இல்லை.

ஜப்பானில் தற்கொலைகளை தடுக்க அமைச்சகம் – தனி அமைச்சர் நியமனம்!!

இந்த பக்கம் பாக்கியா கோபிக்கு கால் செய்கிறார். அவரும் எடுக்கவில்லை. தனம் அனைத்தையும் ஏற்பாடு செய்ய கோபிக்காக குடும்பம் காத்துக்கொண்டுள்ளது. ஆனால் அந்த டென்ஷன் எதுவும் இல்லாமல் கோபி ராதிகாவுடன் ரெஜிஸ்ட்ரேசன் ஆபீஸுக்கு கிளம்புகிறார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

ஜனார்த்தனன் அவங்களை வெளியில் காத்திருக்க சொல்கிறார். ராதிகாவும், கோபியும் பேசிக்கொண்டுள்ளனர். மேலும் மூர்த்தி ராதிகாவை தேடி அவர் தங்கி இருக்கும் அறைக்கு கதிர் எழிலை அனுப்பி வைக்கிறார். அங்கு சென்று பார்த்தால் ராதிகா இல்லை. மேலும் கோபியும் இங்கு தான் தங்கி இருந்தார் என்று சொல்ல அவரும் அங்கு இல்லை என்று சொல்கின்றனர்.

வீட்டிற்கு வந்த ஜீவா நடந்தவற்றை சொல்கிறார். அந்த குடவுன் மட்டும் இல்லை என்றால் கடையே நடத்த முடியாது என்றும் சொல்கிறார். இதனால் குடும்பமே அதிர்ச்சியாகிறது. என்ன செய்வது என்று அனைவரும் அதிர்ச்சியில் இருக்க பாக்கியா நம்பரை வைத்து இது ராதிகா தான் என்று கண்டுபிடிக்கிறார்.

ராதிகாவுக்கு கால் செய்து எங்கு இருக்கீங்க என்று கேட்க அதற்கு ரெஜிஸ்ட்ரேசன் ஆபீஸில் இருப்பதாக சொல்கிறார். ஒரு பக்கம் தனம் அழுகிறார். இதனை பார்த்த பாக்கியா எழிலை அழைத்துக்கொண்டு வெளியில் கிளம்புகிறார். எழிலிடம் நடந்தவற்றை சொல்ல ரெஜிஸ்ட்ரேசன் ஆபீஸுக்கு கிளம்புகின்றனர்.

அங்கு கிட்டத்தட்ட எல்லா வேலையும் முடிகிறது. ராதிகா கையெழுத்திட போக அதற்குள் பாக்கியா தடுக்கிறார். பாக்கியாவை பார்த்த கோபி வெளியில் ஒளிந்துக் கொள்ள நடந்தவற்றை பார்த்து ஜனார்த்தனனுக்கு குழப்பமாகிறது. இதோடு எபிசோடும் முடிவடைகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here