கோபியை ராதிகாவுடன் ஒன்றாக பார்க்கும் எழில் – மாட்டிக்கொள்வாரா?? சூடுபிடிக்கும் கதைக்களம்!!

0

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் பாக்கிய லட்சுமி குடும்பமும் இணைத்து மெகா சங்கமகமாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில் பாக்கியா கடைசி நேரத்தில் ராதிகா கையெழுத்திடுவதை தடுத்து விடுகிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ராதிகாவை கடைசி நேரத்தில் தடுத்து விடுகிறார் பாக்கியா. இதனால் கோவமடையும் ஜனார்த்தனன் பாக்கியாவை திட்டுகிறார். ஆனாலும் பாக்கியா விடுவதாக இல்லை. ராதிகாவிடம் தனியாக பேச வேண்டும் என்று அழைக்கிறார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

வேறு வழியில்லாமல் ராதிகா வெளியே வர அந்த குடவுன் தனது தம்பி உடையது என்று சொல்கிறார். அந்த குடவுன் இல்லையென்றால் தன் தம்பிகள் மிகவும் கஷ்டப்படுவார்கள் என்றும் சொல்கிறார். அதன் பின் எழிலும், ராதிகாவிடம் கெஞ்ச தான் செய்தது தவறு தான் அவர்களிடம் ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாம் என்று சொல்கிறார் ராதிகா.

அதன் பிறகு ஜனார்தனனிடம் மன்னிப்பு கேட்கிறார். தான் இந்த நிலத்தை பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்திடம் கொடுக்கப்போவதாக சொல்கிறார். இதனால் கோவமடையும் ஜனார்த்தனன் உன் கூட வந்தவன் எங்கே என்று கேட்க ராதிகா அவருக்கு கால் செய்கிறார். ஆனால் கோபி எடுக்கவில்லை.

ஜனார்த்தனன் உள்ளே சென்று தேட கோபி ஒளிந்து இருப்பதை கண்டுபிடிக்கிறார். பத்திரத்திற்கு மட்டும் இதுவரை ரூ.3 லட்சம் செலவு செய்திருப்பதாக சொல்லி திட்டுகிறார். அடுத்ததாக ராதிகா மூர்த்தி வீட்டிற்கு வருகிறார். இதனால் ஒட்டுமொத்த குடும்பமும் சந்தோஷமாகிறது. பணத்தை ராதிகாவிடம் கொடுத்து விட்டு பொங்கல் வைக்கின்றனர். குடும்பமே ஒரே சந்தோசமாக உள்ளது.

கமல் நடித்தால் மட்டுமே “பாபநாசம் 2” – நடிகை ஸ்ரீபிரியா பேட்டி!!

நடந்தவற்றை கூற அனைவரும் பாக்கியாவிற்கு நன்றி சொல்கின்றனர். ராதிகா வீட்டை விட்டு கிளம்புகிறார். அடுத்து கோபி வருகிறார். மிகவும் கோபமாகவும் உள்ளார். அந்த சமயத்தில் ராதிகா கால் செய்ய எதுக்கு இப்படி தேவையில்லாமல் பண்ண என்று திட்டி விட்டு போனை வைக்கிறார். அடுத்ததாக பாக்கியா குடும்பமும் கிளம்புகிறது.

கோபி தனக்கு இன்னும் வேலை முடியவில்லை என்று சொல்லி அங்கேயே இருப்பதாக சொல்கிறார். இப்படி அனைவரும் கிளம்பி செல்ல கோபி ராதிகாவுடன் காரைக்குடிக்கு கிளம்புகிறார். ராதிகாவும், கோபியும் இளநீர் குடித்துக்கொண்டு சிரித்து பேசிக்கொண்டுள்ளனர். அந்த பக்கமாக தான் பாக்கியாவும், எழிலும் வருகின்றனர். தண்ணீர் வாங்க கடைக்கு செல்லும் எழில் தனது அப்பாவையும் ராதிகாவையும் பார்த்து விடுகிறார். இதோடு எபிசோடும் முடிவடைகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here