சிவகங்கை மாவட்டத்தில் ஊராட்சி மன்ற துணை தலைவருக்கான தேர்தலில் அதிமுக கட்சியை சேர்ந்த பெண் ஒருவர் வெற்றி அடைந்துள்ளார். திமுக மற்றும் அதிமுக கட்சிகள் இரண்டும் சமமான வாக்குகள் பெற்றதால் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்துள்ளனர்.
சிவகங்கை தேர்தல்:
தமிழகத்தில் உள்ள சிவகங்கை மாவட்டத்தில் இன்று ஊராட்சி மன்ற துணை தலைவருக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் அதிமுக கட்சியினை சேர்ந்த பொன்மணி பாஸ்கரன் என்பவரும் இவருக்கு எதிராக திமுக கட்சி சார்பில் செந்தில் என்பவர் போட்டி இட்டார். இந்த தேர்தல் இன்று காலை 11 மணி அளவில் மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகத்தில் நடைபெற்றது. எப்போதும் நடைபெறும் தேர்தல் போலவே வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தல் 8 வார்டுகளில் நடைபெற்றது.
தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பில்லை – வானிலை மையம் தகவல்!!
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
வாக்கு எண்ணிக்கை இன்றே எண்ணப்பட்டு விட்டது. அதற்கான முடிவுகளும் அறிவிக்கப்பட்டு விட்டன. முடிவுகளில் தேர்தல் நடத்த 8 வார்டுகளிலும் இரு கட்சிகளும் சமமாக வாக்குகளை பெற்றிருந்தது. இதனால் குலுக்கல் முறை தேர்ந்தெடுக்கப்பட்டது. அதில் அதிமுக கட்சியை சேர்ந்த சரஸ்வதி அண்ணா வெற்றி பெற்றுள்ளார். இதனால் அதிமுக கட்சி தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.