பான் கார்டு இதற்கு மேல் செல்லாது?? இது தான் கடைசி வாய்ப்பு…, அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

0
பான் கார்டு இதற்கு மேல் செல்லாது?? இது தான் கடைசி வாய்ப்பு..., அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!
பான் கார்டு இதற்கு மேல் செல்லாது?? இது தான் கடைசி வாய்ப்பு..., அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

இந்திய அரசானது மக்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நலத்திட்டங்களை அறிவிப்பதுடன் அதனை சிறப்பாகவும் செயல்படுத்தி வருகிறது. இந்த நலத்திட்டங்களை மக்கள் பெற ரேஷன் கார்டு, ஆதார் கார்டு உள்ளிட்ட இந்திய குடிமகன் என்பதற்கான ஆவணங்கள் அத்தியாவசியமானதாக மாறி உள்ளது. மேலும், வங்கி மற்றும் வருமான கணக்கு எண்களுடன் தொடர்புடைய பான் கார்டும் தற்போது அடிப்படை அட்டைகளில் ஒன்றாக மாறிவிட்டது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இதனால், இந்த பான் கார்டுடன் ஆதார் எண்ணையும் இணைக்க கோரி அரசு பல மாதங்களாக அறிவுறுத்தி வருகிறது. கடந்த மார்ச் 31ம் தேதி வரை இதற்கான அவகாசம் கொடுக்கப்பட்டு இருந்த நிலையில், பலர் இது குறித்து தெளிவு இல்லாமலேயே இருந்துள்ளனர். இதன் காரணமாக ஜூன் 30ம் தேதி வரை ஆதார் எண்ணை பான் கார்டுடன் இணைக்க கால அவகாசத்தை நீட்டித்து உள்ளது. இந்த கால அவகாசத்தை மக்கள் பயன்படுத்தி கொள்ள தவறினால், குறிப்பிட்ட அந்த நபருக்கு பான் கார்டு செல்லாததாகிவிடும். மேலும் இது தான் கடைசி, இதற்கு மேல் கால அவகாசம் இனி நீட்டிக்க பாடாது எனவும் மத்திய அரசு அறிவித்துள்ளது.

தமிழக பள்ளி மாணவர்களே…, ஜூன் 30 வரை இப்படி தான் வகுப்புகள் நடக்கும்…, கல்வித்துறை அதிரடி அறிவிப்பு!!

இதனை தொடர்ந்து, ஆதார் எண்ணை பான் கார்டுடன் இணைப்பத்திலிருந்து சிலருக்கு விலக்கும் அளிக்கப்பட்டுள்ளது. அதாவது, அஸ்ஸாம், மேகாலயா மற்றும் ஜம்மு காஷ்மீர் மாநிலங்களில் வசிப்பவர்கள், வருமான வரி 1961ன் படி குடியுரிமை பெறாதவர்கள், 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் இந்திய குடிமகன் அல்லாதவர்கள் ஆதார் எண்ணை பான் கார்டுடன் இணைக்க வேண்டிய அவசியமில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here