ஆதார் வைத்திருப்போர் கவனத்திற்கு – இதை செய்ய இன்றே கடைசி நாள்! நாளை முதல் ரூ.1000  அபராதம்!!

0

பான் அட்டையுடன் ஆதார் எண்ணை, இணைக்காதவர்களிடம்  நாளை (01.07.2022) முதல் இரு மடங்கு அபராதம் வசூலிக்கப்படும் என  அரசு அறிவித்துள்ளது.

இரு மடங்கு அபராதம்:

பான் அட்டை எனப்படும், வருமான வரி கணக்கு நிரந்தர எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது அவசியம் என அரசு, கடந்த 2017 ஆம் ஆண்டு அறிக்கை வெளியிட்டது. அதன் பிறகு, அதற்கான காலக்கெடு தொடர்ந்து பல முறை நீட்டிக்கப்பட்டது. இதையடுத்து கடந்தாண்டு மார்ச் 31ஆம் தேதி வரை, இதற்கான இறுதி காலக்கெடு நிறைவடைந்தது. இதையடுத்து, ஆதார் எண்ணை பான் கார்டுடன் இணைப்பதற்கு 500 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என அரசு அறிவித்திருந்தது.

அப்படி இணைக்காதவர்களின் பான் அட்டை செல்லாததாக்கப்படும் என்றும் அறிவித்தது. இந்த நிலையில், இந்த அபராதத்துடன் அடுத்தாண்டு மார்ச் 31ஆம் தேதி வரை, இந்த இணைப்பு செய்வதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை 500 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டு வந்த நிலையில் நாளை முதல், இந்த அபராதம் 1000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

அதற்கான வழிமுறைகளை தற்போது அரசு அறிவித்துள்ளது.

  • இந்த ஆதார் பான் இணைப்புக்கு முதலில் www.incometaxindiaefiling.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்துக்கு செல்ல வேண்டும்.
  • அங்கு Link Aadhaar என்பதை கிளிக் செய்து, அந்தப் பக்கத்தில் கேட்கப்பட்டுள்ள பான் எண், ஆதார் எண் போன்றவற்றை ஆதாரில் உள்ளது போல் நிரப்ப வேண்டும்.
  • பிறகு, ஆதாரில் பிறந்த தேதி முழுமையாக இல்லாமல் ஆண்டு மட்டும் இருந்தால், அதற்கென்று உரிய விவரத்தில் டிக் செய்ய வேண்டும்.
  • பின் இணையத்தில் வரும் கேப்ட்சா குறியீடுகளை டைப் செய்தால், அதற்கான இணைப்பு வெற்றிகரமாக சாத்தியமாக்கப்படும். திரையில், வெற்றிகரமாக இணைக்கப்பட்டது என்பதற்கான அறிவிப்பு பலகை தோன்றும்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here