பாகிஸ்தானில் இயங்கும் செய்திச் சேனல் ஒன்று ஹேக் செய்யப்பட்டு அதன் திரையில் ஒரு இந்தியக் கொடி ‘சுதந்திர தின வாழ்த்துக்கள்’ என்ற செய்தியுடன் தோன்றியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
பாகிஸ்தான் சேனல் ஹேக்:
பாகிஸ்தானின் முன்னணி செய்தி சேனலான டான் (DAWN) ஞாயிற்றுக்கிழமை ஹேக்கர்களால் ஹேக் செய்யப்பட்டது. இந்த சம்பவம் இப்போது சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.
ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!
பிற்பகல் 3.30 மணியளவில், சேனலில் ஒரு விளம்பரம் ஒளிபரப்பாகி கொண்டிருந்த போது, ஒரு முக்கோண இந்தியக் கொடி “சுதந்திர தின வாழ்த்துக்கள்” என்ற செய்தியுடன் திரையில் தோன்றியது. கொடியும் செய்தியும் சிறிது நேரம் திரையில் இருந்தது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் ட்விட்டரில் அதிகளவில் பகிரப்பட்டு உள்ளது.
ڈان انتظامیہ نے معاملے کی فوری طور پر تحقیقات کا حکم دے دیا
Read more: https://t.co/LUXoMdG3EM #DawnNews pic.twitter.com/4hImbV70oZ— DawnNews (@Dawn_News) August 2, 2020
இந்தியாவில் மீண்டும் நுழையும் டிக்டாக்?? வாங்கும் முயற்சியில் மைக்ரோசாப்ட்!!
இந்த விவகாரம் தொடர்பாக அதிகாரப்பூர்வ விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக டான் செய்தி நிறுவனம் ட்விட்டரில் அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளது.