பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்த இந்திய நபர் 30 ஆண்டுகளுக்கு பின் இந்திய இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
சிறை வாசம் :
நமது அண்டை நாடான பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் உள்ளார். இந்த நிலையில் நமது இராணுவ வீரர்களுக்கும், பாகிஸ்தான் வீரர்களுக்கும் அடிக்கடி எல்லை ரீதியான பிரச்சனை இருந்து வருகிறது. இந்த நிலையில், கடந்த சில ஆண்டுக்கு முன் அபிநந்தன் என்ற விமானப்படை அதிகாரி தவறுதலாக பாகிஸ்தான் எல்லைப் பகுதிக்குள் நுழைந்ததால், பாகிஸ்தான் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு விடுதலைக்கு பிறகு இந்திய இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டார். இந்த செய்தி மக்களிடையே மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.
மேலும், இவர் இவ்வளவு எளிதில் விடுதலை செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கவில்லை என மக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர். இதே போல் எல்லை தாண்டிய ஒரு சுவாரஸ்யம் தற்போது நிகழ்ந்துள்ளது. அதாவது மத்திய பிரதேசத்தை சார்ந்த ஒரு நபர் தவறுதலாக பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்து விட்டார். இதையடுத்து பாகிஸ்தான் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட இவர் சிறையில் அடைக்கப்பட்டார். இவர் சிறைவாசம் அனுபவித்து 30 ஆண்டுகள் முடிவடைய போகிறது. தற்போது இவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். 30 ஆண்டுகளுக்கு பிறகு வாகா எல்லையில் இந்திய ராணுவத்தினரிடம் இவர் ஒப்படைக்கப்படுவார் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்