பான் பசிபிக் ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டியில் ரஷ்ய வீராங்கனை லிட்மிலா சாம்சனோவா சிறப்பாக விளையாடி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார்.
பசிபிக் ஓபன் டென்னிஸ்
பெண்களுக்கான 37 வது சர்வதேச பசிபிக் ஓபன் டென்னிஸ் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது. இந்த டென்னிஸ் போட்டிக்கு பல நாட்டில் இருந்து வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இதில் மகளிர் ஒற்றையர் பிரிவுக்கான இறுதி போட்டியில் லிட்மிலா சாம்சனோவா மற்றும் சீனாவின் கின்வென் ஸெங்குடன் ஆகியோர் முன்னேறினர்.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
இவர்கள் இருவருக்கு இடையிலான ஆட்டத்தில் 7-5, 7-5 என்ற நேர் செட் கணக்கில் சீன வீராங்கனையை வீழ்த்தி, ரஷ்ய பெண்மணி லிட்மிலா சாம்சனோவா வெற்றி பெற்றார். இந்த வெற்றியின் மூலம் சாம்சனோவா பசிபிக் ஓபன் டென்னிஸ் போட்டிக்கான பட்டத்தையும், ரூ.59 லட்சமும் பரிசுத் தொகையும் வென்று அசத்தினார்.
ரோஹித்துக்கு ஏற்பட்ட மோசமான நிலைமை., பறிபோகும் கேப்டன் பதவி., உலக கோப்பையில் நடக்க போவது என்ன??
இவர் இதுவரை டென்னிஸ் போட்டியில் 4 சர்வதேச பட்டங்களை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வெற்றியின் மூலம் லிட்மிலா சாம்சனோவா WTA தரவரிசை பட்டியலில் 20-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.