கொரோனா நோயாளிகளுக்கான ஆக்சிஜன் வசதி பேருந்து – புதிய முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைப்பு!!

0

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை காரணமாக சுமார் 21 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தற்போது பால்வேறு கட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கொரோனா தொற்று:

தமிழகத்தில் சுமார் ஒரு மாத காலத்திற்கும் மேலாக கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாவது அலை மக்களை மிக கடுமையாக பாதித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த பல்வேறு கட்ட தடுப்பு நடவடிக்கைகள் அமல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் இந்தியா முழுவதும் தற்போது கொரோனா நோயாளிகளுக்கு வழங்கப்படும் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்க தற்போது மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு கட்ட நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது தமிழகத்தில் கொரோனா நோயாளிகளுக்கு பயன்படும் வகையில் புதிய திட்டம் ஒன்று தொடங்கப்படவுள்ளது. அதன்படி தமிழகத்தில் கொரோனா நோயளிக்கு பயனடையும் வகையில் ஆக்சிஜன் வசதி பொருந்திய பேருந்து சேவை தொடங்கப்படவுள்ளது.

இதனை தமிழகத்தின் புதிய முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் துவக்கி வைக்கவுள்ளார். ஜெயின் சங்கம் சார்பில் 4 ஆக்சிஜன் வசதியுடன் கூடிய பேருந்துகளை இன்று தொடங்கி வைக்கவுள்ளார். மேலும் இன்று மதியம் 1.30 மணி அளவில் ஓமந்தூர் மருத்துவமனையில் நடக்கும் விழாவில் ஸ்டாலினுடன் உதயநிதி ஸ்டாலினும் கலந்துகொள்ளவுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here