சென்னைக்கு விரைந்த முதல் ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் – ரயில்வே அமைச்சர் தகவல்!!

0

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சைக்காக வழங்கப்படும் ஆக்சிஜனுக்கு தற்போது நாடு முழுவதும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக தற்போது அனைத்து மாநிலங்களுக்கு ரயில்கள் மூலம் ஆக்சிஜன் அனுப்பப்பட்டு வருகிறது.

ஆக்சிஜன்:

இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாம் அலையின் அசுர வேகத்தினால் தினசரி 3 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதேபோல் தற்போது தொற்றினால் ஏற்படும் பலி எண்ணிக்கையும் 4 ஆயிரத்தை தாண்டி வருகிறது. ஒரு பக்கம் கொரோனாவினால் நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். மறுபக்கம் மருத்துவத்திற்கான ஆக்சிஜன் வசதி இல்லாமல் உயிரிழந்து வருகின்றனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதனால் மக்கள் கடுமையான வேதனைக்கு உள்ளாகி வருகின்றனர். இந்நிலையில் நாட்டில் ஏற்பட்டுள்ள ஆக்சிஜன் தட்டுப்பாட்டை குறைக்கும் வகையில் மத்திய மற்றும் மாநில அரசுகள் விரைவான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அந்த வகையில் நேற்று முதல் தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி துவங்கி விநியோகிக்கப்பட்டு வருகிறது.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

நாட்டில் 31 கோடிக்கு அதிகமானவர்களுக்கு கொரோனா பரிசோதனை – ஐ.சி.எம்.ஆர் அறிக்கை!!

இதனை தொடர்ந்து தற்போது சென்னைக்கு ஆக்சிஜன் கண்டெய்னர்களுடன் முதல் எக்ஸ்பிரஸ் வந்தடைந்துள்ளது. இந்த ரயில் துர்காபூர் பகுதியில் இருந்து வந்துள்ளது. தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள ஆக்சிஜன் தட்டுப்பாட்டை குறைக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனை மத்திய ரயில்துறை அமைச்சரான பியூஸ் கோயல் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here