8 லட்சம் இந்தியர்கள் குவைத்தை விட்டு வெளியேறும் அபாயம் – வெளிநாட்டு மசோதாவுக்கு ஒப்புதல்..!

0

குவைத் அரசு அறிமுகப்படுத்தியுள்ள சட்ட மசோதாவால் வெளிநாட்டு தொழிலாளர்களின் எண்ணிக்கையை குறைக்கும் வகையில் இந்தியர்கள் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.

குவைத் அரசு முடிவு..!

கொரோனா வைரஸ் தாக்கத்தால் பிற நாடுகளை போலவே பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில், குவைத் அரசு சொந்த நாட்டினருக்கு வேலை வாய்ப்புகளை உறுதி செய்யும் வகையில் புதிய சட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. குவைத்தின் தேசிய சட்டமன்றத்தின் சட்ட மற்றும் சட்டமன்றக்குழு வரைவு வெளிநாட்டு ஒதுக்கீட்டு மசோதாவுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

இந்தியர்களின் எண்ணிக்கையை குறைக்க முடிவு..!

குவைத் நாட்டில் மக்கள் தொகை 43 லட்சம் பேர் இதில் வெளிநாட்டினர் 30 லட்சம் பேர் உள்ளனர். இதில் இந்தியர்கள் தன அதிகம் ஆகவே இந்தியர்களின் எண்ணிக்கையை 15 சதவீதமாக குறைக்க குவைத் அரசு முடிவு செய்கிறது.

இந்நிலையில் 14 லட்சமாக இருக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை ஆறரை முதல் 7 லட்சமாக குறைக்கப்படும் போது மீதமுள்ள 7 முதல் 8 லட்சம் இந்தியர்கள் குவைத்திலிருந்து வெளியேற்றப்படுவார்கள். அதன்படி இந்தியர்களுக்கு அடுத்தப்படியாக அதிக எண்ணிக்கையில் வசிக்கும் எகிப்தியர்களின் எண்ணிக்கையை 10 சதவீதமாக குறைக்கவும் இச்சட்டம் வகை செய்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here