தமிழகத்தின் அரசு பள்ளி மாணவர்களின் ஊட்டச்சத்து குறைபாடுகளை நீக்க காலை உணவுத் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிமுகப்படுத்தினார். முதல் கட்டமாக 1 முதல் 5ம் வகுப்பு வரை உள்ள 1,545 தொடக்க பள்ளி குழந்தைகளுக்கு வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து இத்திட்டம் மார்ச் 1ம் தேதி மு.க.ஸ்டாலின் பிறந்த நாளில் மேலும் விரிவாக்கம் செய்யப்பட்டது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
எனவே சென்னை, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்ட தொடக்க பள்ளிகளில் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்மூலம் பசியின்றி வாடும் ஏழை எளிய மலைப்பகுதி குழந்தைகளின் துயர் முற்றிலுமாக நீங்கி உள்ளது என பள்ளி தலைமை ஆசிரியர்கள் எடுத்துரைத்துள்ளார். மேலும் “எந்த மாநிலத்திலும் இல்லாத மேன்மை மிகு திட்டமாக உள்ளது. இதனால் பள்ளி மாணவர்களின் சேர்க்கை உயர்ந்துள்ளதாகவும் விடுமுறை எடுப்பவர்கள் குறைந்துள்ளதாகவும் பல்வேறு கருத்துகளை பகிர்ந்துள்ளனர்.
தமிழக மக்களுக்கு ஜாக்பாட்., வெறும் ரூ. 300 போதும்! அரசு பஸ்ல ஒரு நாள் Full ஆ ஊர் சுத்தலாம்!!
அதேபோல் ஒரே மாதிரியான உணவு இல்லாமல் சுழற்சி முறையில் உணவு வழங்குவது வரவேற்கத்தக்கது. மேலும் இதற்கென செயலி உருவாக்கப்பட்டு அதன் மூலம் புகைப்படத்துடன் கூடிய விவரங்களை அனுதினமும் தலைமை ஆசிரியர்கள் அப்டேட் செய்வதை முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்காணித்து” வருகிறார் என்று தலைமை ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.