புதுச்சேரி அரசு ஆண்டுதோறும் இந்திய திரைப்பட விழா நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு திரைப்பட விழா நேற்று புதுவையில் உள்ள அலையன்ஸ் பிரான்சேஸ் அரங்கத்தில் நடைபெற்றது. அதில் தமிழ் நாடிகள் பார்த்திபன் இயக்கத்தில் வெளியான “ஒத்த செருப்பு” படம் சிறந்த படத்திற்கான விருதை பெற்றது.
சிறந்த திரைப்பட விருது:
புதுவையில் வருடந்தோறும் இந்திய திரைப்பட விழா நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு டிசம்பர் 15 ஆம் தேதி அன்று அலையன்ஸ் பிரான்சேஸ் அரங்கத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பல்வேறு திரைப்பட நடிகர் நடிகைகளும் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சி புதுசேரி முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் நடைபெற்றது. இதில் நடிகர் பார்த்திபன் இயக்கி நடித்த “ஒத்த செருப்பு” படம் சிறந்த படமாக தேர்ந்தெடுக்கப்பட்டு விருது வழங்கப்பட்டது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
ஒத்த செருப்பு படம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 20-ம் தேதி வெளியிடப்பட்டது. ஒரே ஒரு கதாபாத்திரம் மட்டுமே ஒட்டுமொத்த திரைப்படத்திலும் தோன்றும் வகையிலான திரைக்கதையை அமைத்து நடித்துள்ள இப்படம் விமர்சனம் ரீதியாக பெரும் வரவேற்பை பெற்றது.இந்த ஆண்டுக்கான இந்தியாவின் ஆஸ்கர் விருது பரிந்துரையில் “ஒத்த செருப்பு” திரைப்படம் நிச்சயம் இடம்பெறும் எனவும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அறிவிக்கப்பட்ட ஆஸ்கர் விருதுக்கான இந்திய பரிந்துரையில் ‘gully boy’ திரைப்படம் இடம்பெற்றிருந்தது. இதனால் பெரும் வருத்தத்தில் படக்குழு இருந்தது.
மீண்டும் தடாலடியாக உயர்ந்த தங்க விலை – இன்றைய விலை நிலவரம்!!
தற்போது புதுவை அரசு இப்படத்தை சிறந்த இருக்குனர் மற்றும் சிறந்த படமாக தேர்ந்தெடுக்கப்பட்டு .புதுவை அரசின் சங்கரதாஸ் சுவாமிகள் பெயரிலான விருதினை இயக்குனர் பார்த்திபனுக்கு முதலமைச்சர் நாராயணசாமி வழங்கினார். விருதுக்கான பாராட்டு பத்திரத்துடன் ரூ.1 லட்சம் ரொக்க பரிசும் வழங்கப்பட்டது.அதையடுத்து அலையன்ஸ் பிரான்சேஸ் கலையரங்கில் “ஒத்த செருப்பு” திரைப்படம் திரையிடப்பட்டது.