ஆஸ்கர் அவார்டில் இருந்து வெளியேறிய நயன்தாரா திரைப்படம் – நொந்து நூடுல்ஸ் ஆகி போன விக்னேஷ் சிவன்!!

0
முக்கிய இடத்திற்கு சென்று திருமண வேண்டுதலை வைத்த விக்னேஷ் சிவன் - நயன்தாரா - எங்கன்னு பாருங்க!!

நயன்தாரா நடிப்பில் உருவாகியிருந்த கூழாங்கல் திரைப்படம் ஆஸ்கர் பட்டியலில் இருந்து வெளியேறி இருப்பது நயன்-விக்கி ஜோடியினரிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

சோகத்தில் ஜோடிகள்:

இயக்குனர் விக்னேஷ் சிவன் , நயன்தாரா இணைந்து உருவாக்கி அண்மையில் ஓடிடி தளத்தில் வெளியான திரைப்படம் கூழாங்கல். இந்த திரைப்படம், சமீபத்தில் வெளியிடப்பட்ட ஆஸ்கார் இணையத்தளத்தின் அதிகாரப்பூர்வ பட்டியலில் இடம் பெற்றிருந்தது. ஆஸ்கார் நிகழ்வின் விருது வழங்கும் விழா அடுத்த வருடம் மார்ச் மாதம் 27ம் தேதி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற திட்டமிடப்பட்டிருந்தது.  இந்த நிகழ்வில் 15 படங்கள் இறுதி செய்யப்பட்டு அதில் ஒரு படத்துக்கு ஆஸ்கார் விருது வழங்கப்படும்.

இந்த நிலையில், தற்போது  கூழாங்கல் திரைப்படம் இறுதிப் பட்டியலில் இருந்து வெளியேறியது. இது குறித்து ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ள இயக்குனர் விக்னேஷ் சிவன், இந்த பட்டியலில் கூழாங்கல் திரைப்படம் இடம்பெற்றிருந்தால் நன்றாக இருக்கும் எனவும், இருந்தாலும் ஆஸ்கார் விருதுக்கான அதிகாரப்பூர்வ பட்டியலில் இந்தப் படத்தை தேர்ந்தெடுத்த இந்திய நடுவர் உறுப்பினர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் எனவும் தெரிவித்துள்ளார். இந்த பட்டியலில் இவர் படம் இடம் பெறாதது ரசிகர்களிடையே பயங்கர சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here