ஜீ தமிழ் சீரியல் செய்த புதிய சாதனை – குவியும் வாழ்த்துக்கள்!!

0

ஜீ தமிழில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி சீரியல் தற்போது புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது. அந்த சீரியலுக்கு தற்போது வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.

ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி

ஜீ தமிழ் சில வருடங்களுக்கு முன்பாக அதிரடியாக பல சீரியல்களை களமிறக்கியது. ஆரம்பத்தில் சீரியல்கள் பலவும் கலைக்கட்டியது. மேலும் விஜய் டிவியை காப்பி செய்து பல நிகழ்ச்சிகளை உருவாக்கி வந்தனர். சீரியல்களில் இருந்து சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி வரை ஒளிபரப்பாக்கினர்.

இதனால் சோசியல் மீடியாவில் ஜீ தமிழ் தொலைக்காட்சியை திட்டியும் தீர்த்தனர். இப்பொழுது சீரியல்களும் சுவாரசியம் இல்லாமல் போயிக்கொண்டிருந்ததால் அதுவும் பிளாப் ஆகியுள்ளது. இந்த தொலைக்காட்சியில் இருந்த முக்கிய பிரபலங்கள் அனைவரும் வேறு சேனலை தேடி சென்று விட்டனர்.

ஆன்லைன் ஷாப்பிங் பரிதாபங்கள் – பொம்மை காருக்கு பதில் பிஸ்கட் அனுப்பிய அமேசான்!!

அர்ச்சனா, தீபக், ரேஷ்மா என அனைவருமே ஜீ தமிழை விட்டு விலகியுள்ளனர். இதனால் ஜீ தமிழ் சற்று மோசமான நிலையில் தான் உள்ளது. ஆனாலும் சில சீரியல்கள் விறுவிறுப்பான சம்பங்களுடன் ஒளிபரப்பாகி கொண்டு தான் உள்ளது. அதில் ஒன்று தான் ‘ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி’.

நமது கதாநாயகியை பிடிக்காமல் திருமணம் செய்த கொண்ட ஹீரோ தற்போது எவ்வளவு பாசமாக வைத்து கொள்கிறார் என்ற கதைக்களத்தில் தான் கதை நகர்ந்துகொண்டுள்ளது. தற்போது அந்த சீரியல் 900 எபிசோடுகளை கடந்து சாதனை புரிந்துள்ளது. இதனால் பலரும் அந்த சீரியலுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here