மது கடைகள் திறக்க வாய்ப்பு – உற்சாகத்தில் மது பிரியர்கள்

0
Closeup of five wineglasses arranged one next to the other, half full with several sorts of wines, red, white and rose wines. Glasses are on the table, there are some papers and pens in background as this was the detail from winetasting. Lit from both sides.

கொரோனா பரவலை குறைக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் மதுகடைகள் அடைக்கப்பட்டிருந்தது. தற்போது மது கடைகள் திறக்கப்போவதாக வெளியாகிய தகவல்களால் மது பிரியர்கள் ஆனந்தத்தில் உள்ளனர்.

டாஸ்மாக் கடைகள்: 

நாடு முழுவதும் கொரோனா தொற்றின் தாக்கத்திலிருந்து மீள்வது எப்படி என்பது குறித்து தீவிரமான ஆலோசனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் ஏற்கனவே ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு அமல்படுத்துவதன் மூலம் மக்களை கூட்டமாக சேராமல் தனிமைபடுத்தலாம் என ஊரடங்கு அமல் படுத்தப்பட்டது. இந்நிலையில் மக்கள் தங்களது அத்யாவசிய பொருட்களுக்கு கூட வெளியில் செல்ல முடியாமல் தவித்து வந்தனர்.

தற்போது நோய்த்தொற்று பரவும் விகிதம் படிப்படியாக குறைந்து வருவதால் ஊரடங்கில் தளர்வுகள் ஏற்படுத்தப்படுகிறது. ஊரடங்கு நீட்டிப்பு, தளர்வுகள் வழங்குவது பற்றி உயர்மட்ட அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை .நடத்தியதில் தமிழகத்தில் மேலும் ஒரு வாரம் காலம் நீட்டிப்பு செய்ய உயர் அதிகாரிகள் ஆலோசித்தனை வழங்கியுள்ளனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதனால் நோய்த்தொற்று பாதிப்பு அதிகமாக இருக்கும் பகுதிகளில் தளர்வுகளற்ற ஊரடங்கும் பாதிப்பு குறைவாக இருக்கும் பகுதிகளில் இன்னும் சில தளர்வுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 14ஆம் தேதிக்கு பின்னர் பாதிப்பு அதிகமில்லாத மாவட்டங்களில் அதிகாலை நடைபயிற்சி, டாஸ்மாக் கடைகள் திறக்க வாய்ப்புள்ளதாக தகவல்கல் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here