உத்தரபிரதேசம் மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கட்ட உச்சநீதிமன்றம் கடந்த 2019 ஆம் ஆண்டு அனுமதி அளித்தது. இதனால் 2020 ஆம் ஆண்டு பிரதமர் மோடி அவர்களால் அடிகள் நாட்டப்பட்டு கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டது. மிகப்பிரமாண்டமாக கட்டப்பட்டு வரும் இந்த கோவிலில் 5 மணி மண்டபங்களில் சீதை, வால்மீகி, லட்சுமணன், ஜடாயு ,விநாயகருக்கும் 200 மேற்பட்ட தூண்களும் கட்டப்பட்டு வருகிறது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சமீபத்தில் ஜனவரி 1, 2024 அன்று ராமர் கோவிலின் அனைத்து பணிகளும் முடிவடைந்து விடும் என்று கூறியிருந்தார். மேலும் நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் இந்த கோவில் திறக்க போவதால் மக்களிடத்தில் நல்ல வரவேற்பை பாஜக பெறும் எனவும் தெரிவிரித்திருந்தார்.
தமிழகத்தில் பொங்கல் பண்டிகை கொண்டாட புதிய வழிமுறைகள்., இந்த நாளில் இதை செய்ய தடை!!
இந்நிலையில் இப்போது ராமஜென்மபூமி அறக்கட்டளை பொதுச் செயலாளர் சம்பத் ராய் நேற்று அளித்த பேட்டியில், ராமர் கோவில் கட்டுமான பணிகள் இந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் முடிந்து விடும் என்றும், அடுத்த ஆண்டு மகர சங்கராந்தி அன்று (ஜனவரி 14, 2024) கோவில் நடை திறக்கப்படும் என்று கூறியுள்ளார்.